70 ஆண்டுகளில் பிற நாட்டின் ஒரு அங்குலத்தை கூட ஆக்கிரமிக்கவே இல்லை.. கூசாமல் பொய்யை அள்ளிவிடும் சீனா
பெய்ஜிங்: பிற நாடுகளுக்கு சொந்தமான நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தைக் கூட சீனா கடந்த 70 ஆண்டுகளில் ஆக்கிரமித்ததே இல்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து ஊடுருவல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்தும் வருகின்றனர்.
கால்வன் பள்ளத்தாக்கை தொடர்ந்து பாங்கோங் ஏரியையும் ஆக்கிரமிக்க சீனா முயற்சிக்கிறது. ஆனால் சீனா வீரர்களை இந்திய ராணுவத்தினர் துரத்தியடித்தனர். எல்லை பிரச்சனை தொடர்பாக இருநாடுகளும் பல்வேறு நிலைகளில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அங்குலம் கூட ஆக்கிரமிப்பு இல்லை
இதனிடையே சீனா வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங் (Hua Chunying) கூறியதாவது: கடந்த 70 ஆண்டுகளில் பிற நாடுகளின் ஒரு அங்குலத்தை கூட சீனா இதுவரை ஆக்கிரமித்ததே இல்லை; சீனா போரை தூண்டும் நடவடிக்கைகளிலோ மோதல்களிலோ ஒரு போதும் ஈடுபட்டதும் இல்லை.

ஊடுருவியதும் இல்லை
எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளை சீனா ராணுவத்தினர் மதித்தே நடந்து வருகின்றனர். ஒருபோதும் சீன ராணுவத்தினர் எல்லை தாண்டியதே இல்லை. இருந்தபோதும் சில நேரங்களில் தகவல் தொடர்பில் பிரச்சனைகள் இருந்திருக்கலாம். இருதரப்பும் அமைதியையும் நல்லுறவையும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். எல்லைகளில் அமைதியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

எல்லையில் ராணுவம் குவிப்பா?
இந்திய எல்லையில் சீனா ராணுவத்தை குவித்து வருவதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன. இருநாட்டு மக்களும் உண்மைகளை உணர்ந்து அமைதியாக வாழவே விரும்புகின்றனர். இந்திய ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் உண்மையும் இல்லை.

இருதரப்பு நல்லுறவு, அமைதி முக்கியம்
இந்தியா - சீனா இடையே பல்வேறு நிலைகளிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. எல்லைப் பகுதிகளில் அமைதியை நிலைநாட்டுவதிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் இந்த பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக உதவும். இவ்வாறு ஹூவா சுனிங் தெரிவித்துள்ளார்.
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
பெட்ரோல் விலை பிச்சுகிட்டு போக போகுது..வேலையைக் காட்டிய ரஷ்யா! இந்தியாவுக்கு காத்திருக்கும் சிக்கல்! -
ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு.. உச்சத்துக்கு போகும் பெட்ரோல், டீசல் விலை! இந்தியாவுக்கு நெருக்கடி! -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications