முதன்முறையாக 2 பெண்களை தலையை துண்டித்துக் கொன்ற ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ருட்: முதன்முறையாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் மாந்திரீகவாதிகளான இரண்டு பெண்களின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
சிரியாவில் உள்ள தேர் அல் ஜோர் மாகாணத்தில் இருக்கும் மாயாதீன் நகரில் மாந்திரீகவாதிகளான இரண்டு பெண்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். இரண்டு பெண்களும் அவர்களின் கணவர்களுடன் சேர்த்து தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் முதன்முறையாக பெண்களை தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர். முன்னதாக கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண்களை கல்லால் அடித்துக் கொன்றுள்ளனர்.
இந்த ஆண்டு சிரியாவில் 3 ஆயிரம் பேரை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொலை செய்துள்ளனர். அதில் 1,800 பேர் பொதுமக்கள். கொலை செய்யப்பட்டவர்களில் 74 குழந்தைகளும் அடக்கம்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காத குற்றத்திற்காக 8 பேரை தீவிரவாதிகள் தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications