ரஷ்யாவில் இந்திய வீரர்கள் பங்கேற்ற.. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகை! ஃபுல் டென்ஷனில் அமெரிக்கா
மாஸ்கோ: ரஷ்யா-பெலாரஸ் நடத்திய 'ஸாபாட் 2025' எனும் ராணுவப் பயிற்சிக்கு இந்தியா, 65 வீரர்களை அனுப்பியிருந்தது. இந்த சம்பவம் மேற்கத்திய நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அணு ஆயுத தாக்குதல் ஒத்திகைகள் அடங்கிய இந்தப் பயிற்சி, நேட்டோ நாடுகளுக்கு அருகில் நடத்தப்பட்டதால், பதற்றம் அதிகரித்துள்ளது.
'ஸாபாட் 2025' என்பது ரஷ்யாவும், பெலாரசும் சேர்ந்து நடத்திய போர் பயிற்சியாகும். இந்த பயிற்சியில் இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி, வங்கதேசம், நைஜர், ஈரான், தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்களும் பங்கேற்றிருந்தனர். இந்தியா சார்பில் 65 வீரர்கள் இதில் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச ஊடகங்களின் ராணுவ ஆய்வாளர்கள், இந்தப் பயிற்சி போலந்திலிருந்து தொடங்கி, ஐரோப்பாவின் பிற நாடுகளையும் அச்சுறுத்தும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டதாகக் கருதுகின்றனர். ஆனால், நமது பங்களிப்பு நமக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஏனெனில் நமக்கு இப்போது வரை பல முக்கியமான ராணுவ ஆயுதங்களை ரஷ்யாதான் கொடுத்து வருகிறது. எனவே ரஷ்யாவுடன் ஒத்துழைப்பது முக்கியம்.
இந்த ஒத்துழைப்புகள் இருந்தாலும், மறுபுறம் நேட்டோ இந்த விஷயத்தை கவலையுடன் அணுகுகிறது. நேட்டோவின் கவலைகளை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை தலைவர் காஜா கல்லாஸ் தனது கருத்துக்களில் வெளிப்படுத்தினார். "இந்தியாவுடனான உறவு வர்த்தக ஒப்பந்தத்திற்கு அப்பாற்பட்டது. விதி அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பது, ராணுவப் பயிற்சிகளில் பங்கேற்பது, எண்ணெய் கொள்முதல்... இவை நமது ஒத்துழைப்புக்குத் தடைகளாக உள்ளன" என்று கூறியிருக்கிறார்.
ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற முதல் ரஷ்ய-பெலாரஸ் பயிற்சி இது என்பதால், அமெரிக்கா தனது ராணுவப் பிரதிநிதிகளை இந்தப் போர்ப்பயிற்சியைக் கண்காணிக்க அனுப்பியுள்ளது. இந்த போர் பயிற்சியில் இந்தியாவின் பங்கேற்பு, மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுடனான உறவுகளை சிக்கலான நிலைக்குத் தள்ளியுள்ளது.
ரஷ்யாவுடனான ஒத்துழைப்புக்கு எதிராக அமெரிக்கா, இந்தியா மீது 50% அளவுக்கு வரியை விதித்தது. இருப்பினும் இந்தியா அசைந்து கொடுக்கவில்லை. என்னதான் வரி இருந்தாலும், ஆசியாவில் சீனாவை சமாளிக்க ஒரு உறுதியான கூட்டாளி அமெரிக்காவுக்கு தேவை. எனவே இந்தியாவை அமெரிக்கா விட்டுக்கொடுக்காது. இதை உறுதி செய்யும் வகையில், நேற்று பிரதமர் மோடியின் பிறந்த தினத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து டிரம்ப் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இப்படியாக இந்தியா-அமெரிக்க மோதல்கள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஸாபாட் போர் பயிற்சி மூலம், இந்த உறவு புதுப்பித்தல் முயற்சியை மீண்டும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது.
-
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications