அடுத்தடுத்த சர்ச்சை.. இந்தியர்களுக்கான விசா சேவையை நிறுத்தியது வங்கதேசம்! நிலைமை மாறுதே!
Subscribe to Oneindia Tamil
டாக்கா: வங்கதேசத்தில் கடந்த 35 நாட்களில் 11 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதனை கண்டித்து இந்தியாவில் உள்ள இந்துத்துவா அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றன. அதேபோல ஐபிஎல்-ல் கொல்கத்தா அணிக்காக விளையாட ஏலம் எடுக்கப்பட்ட, வங்கதேச வீரர் நீக்கப்பட்டார். இப்படி இருக்கையில் தற்போது இந்தியர்களுக்கான விசா சேவையை வங்கதேசம் ரத்து செய்திருக்கிறது.
இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக வங்கதேசம் அறிவித்திருக்கிறது. எனவே சென்னை, டெல்லி, கொல்கத்தா, மும்பை, கவுகாத்தி மற்றும் அகர்தலா உள்ளிட்ட இடங்களில் இயங்கும் வங்கதேச தூதரகம், வர்த்தகம் வேலைவாய்ப்பு விசாக்களை தவிர, சுற்றுலா உள்ளிட்ட பிற வகை விசாக்கள் வழங்குவதை நிறுத்தியுள்ளன.













Click it and Unblock the Notifications