இந்திய தேசிய கீதம் பாடியபோது எழுந்திருக்காத ஜெர்மனி அதிபர்.. உருவான சர்ச்சை.. உண்மை இதுதான்!
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது.
பெர்லின்: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இந்திய தேசிய கீதம் பாடப்பட்ட போது ஏன் எழுந்து நிற்கவில்லை என்ற விவரம் தற்போது வெளியாகி உள்ளது. அவரின் இந்த செயல் இணையம் முழுக்க சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது .
ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்து இருக்கிறார். அவர் பிரதமர் மோடியுடன் இன்று சந்திப்பு நடத்தினார். இதில் இரு நாடுகள் இடையேயும் பல தரப்பட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
பாதுகாப்பு துறை, மருத்துவம், இணைய பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் பல ஒப்பந்தங்கள் இரண்டு நாட்டிற்கு இடையில் இன்று கையெழுத்தானது.
|
அரசு சந்திப்பு
இந்த நிலையில் இன்று நடந்த அரசு முறை சந்திப்பில் தொடக்கத்தில் இந்திய தேசிய கீதம் பாடப்பட்டது. அதை தொடர்ந்து ஜெர்மன் தேசிய கீதமும் பாடப்பட்டது. இரண்டிற்கும் ஏஞ்சலா மெர்கெல் எழாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தார். அவர் அருகே யாரும் அப்போது இல்லை.

பெரிய சர்ச்சை
அவரின் இந்த செயல் கொஞ்சம் சர்ச்சையானது. இணையம் முழுக்க பலர் இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தனர். இந்திய தேசிய கீதத்திற்கு அவர் ஏன் எழுந்து மரியாதை செலுத்தவில்லை. ஏன் அதிகாரிகள் இதை கேள்வி கேட்கவில்லை என்று பலர் சர்ச்சையாக்கினார்கள்.

ஏன் இப்படி
இந்த நிலையில் ஏஞ்சலா மெர்கெல் ஏன் எழவில்லை என்று விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏஞ்சலா மெர்கெல் வயது முதிர்ச்சி காரணமாக தனியாக எழுந்து நிற்க முடியாது. அவர் நிற்க வேண்டும் என்றால் அருகே ஒருவர் அவரை பிடித்து இருக்க வேண்டும்.

விளக்கம் அளித்தனர்
இதனால் அவர் தேசிய கீதத்தின் போது நிற்காமல் இருக்க அனுமதி கேட்டு வாங்கி இருக்கிறார். அவரின் உடல்நிலை காரணம் காட்டி இந்திய தரப்பும் அவருக்கும் இந்த அனுமதியை வழங்கி உள்ளது. அவருடைய இந்த சந்திப்பில் இதேபோல் முக்கிய பல விதிகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications