ராஜ்நாத் சிங் உடன் மீட்டிங்?.. சீன ஊடகம் வெளியிட்ட செய்தி.. இந்தியா அதிரடி மறுப்பு.. என்ன நடந்தது?
மாஸ்கோ: சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே உடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்த போவதில்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது .
Recommended Video
ரஷ்யாவில் இன்று மாபெரும் ராணுவ அணிவகுப்பு நடக்கிறது. ரஷ்யாவில் நடக்கும் ராணுவ அணிவகுப்பில் இன்று இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இரண்டாம் உலகப்போரில் நாசி ஜெர்மனியை ரஷ்யா வீழ்த்தியது.
இந்த போர் நடந்து 75 வருடங்கள் முடிந்துவிட்டது. இதில் 20 மில்லியன் ரஷ்ய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களை நினைவு கூறும் விதமான அங்கு இன்று ராணுவ அணிவகுப்பு நடக்கிறது.

ரஷ்யா எப்படி
ரஷ்யாவின் இந்த ராணுவ அணிவகுப்பிற்கு சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சரும் வருகிறார். சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே இதில் பங்கேற்கிறார். அதேபோல் 11 நாடுகளை சேர்த்து அமைச்சர்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் இன்று நடக்கும் விழாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கேவை சந்திக்கிறார் என்று செய்திகள் வந்தது.

இன்று சந்திப்பு
அதாவது இவர்கள் இருவரும் இன்று சந்திக்க போகிறார்கள், இரண்டு நாட்டு பிரச்சனை குறித்தும் உறவு குறித்தும் பேசுவார்கள். கல்வான் சண்டைக்கு பிறகு இது மிக முக்கியமான சந்திப்பாக இருக்க போகிறது என்று சீனாவின் செய்தி ஊடகமாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த செய்தி நிறுவனம் சீனாவின் அரசுக்கு கட்டுப்பட்டு இயங்கும் நிறுவனம் ஆகும் .

என்ன பதில்
இந்த நிலையில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வெய் பெங்கே உடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு நடத்த போவதில்லை. அவர் சீன அதிகாரிகள் யாரையும் சந்திக்க போவதில்லை. அப்படி எந்த விதமான திட்டங்களும் அரசிடம் இல்லை. பொய்யான செய்திகளை நம்ப வேண்டாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

நேற்று மீட்டிங்
இந்த நிலையில் நேற்று இந்தியா - சீனா - ரஷ்யா ஆகிய நாடுகள் இடையே மீட்டிங் நடந்தது. மூன்று நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். கல்வான் தாக்குதல் தொடர்பாக இதில் எந்த விதமான ஆலோசனையும் நடக்கவில்லை என்கிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications