சர்ஜிக்கல் ஸ்டிரைக்.. எங்களை தாக்க இந்தியா பிளான் போடுகிறது.. பாக். பகீர் கருத்து.. பின்னணி என்ன?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் அந்த நாடு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியா - சீனா இடையில் லடாக் எல்லையில் பிரச்சனை நிலவி வருகிறது. லடாக்கை மொத்தமாக ஆக்கிரமிக்க சீனா திட்டமிட்டு வருகிறது. இன்னொரு பக்கம் காஷ்மீரில் தொடர்ந்து பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது.
பாகிஸ்தான் ராணுவம் தினமும் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையில் ராணுவ ரீதியான கடுமையான மோதல் தற்போது இருக்கிறது.
பின்லேடன் ஒரு தியாகி.. அமெரிக்காதான் அத்துமீறியது.. பாக். பிரதமர் இம்ரான் பரபர கருத்து.. திருப்பம்!
கருத்து என்ன
இந்த நிலையில் பாகிஸ்தான் மீது ராணுவ ரீதியான தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதற்கான காரணத்தையும் அந்த நாடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கருத்து தெரிவித்துள்ளார். அதில், பாகிஸ்தான் மீது இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம்.
இந்தியா திட்டம்
இதற்காக இந்தியா திட்டங்களை வகுத்து வருகிறது. சீனாவுடன் இந்தியா மோதலில் இருக்கிறது. இதில் இந்தியா பலத்த அடி வாங்கி உள்ளது. இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகி உள்ளார். இதனால் இந்தியாவிற்கு தற்போது கடுமையான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி சமாளிப்பது என்று இந்தியாவிற்கு தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் பக்கம் இந்தியா திரும்பி உள்ளது.
பாகிஸ்தான் அட்டாக்
பாகிஸ்தானை தாக்கினால் மக்களின் கவனம் திரும்பும் என்று இந்தியா நினைக்கிறது. சீனா மீதான இந்தியர்களின் கவனத்தை திசை திருப்ப அந்த நாடு இப்படி திட்டம் போடுகிறது. ஆனால் இந்தியா ஏதாவது சாகசம் செய்ய நினைத்தால் அதற்கு பாகிஸ்தான் உடனடியாக பதிலடி கொடுக்கும். பாகிஸ்தான் கடுமையான பதிலடியை கொடுக்கும், என்று குரேஷி கூறியுள்ளார்.
ஆனால் நிலைமை
ஆனால் இதற்கு குரேஷி எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. வாயில் வந்ததை கூறுவது போல எந்த விதமான ஆதாரமும் இன்றி அவர் பேசி இருக்கிறார். பாகிஸ்தான் மீது இந்தியா இதற்கு முன் சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல்களை நிகழ்த்தி உள்ளது. அதிலும் ஜெஇஎம் தீவிரவாதிகள் மீதான பாலக்கோடு தாக்குதல் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.