சமையல்கார பெண்ணை துன்புறுத்தியதாக புகார்: இந்திய தூதரை வெளியேற்றிய நியூசிலாந்து அரசு
வெல்லிங்டன்: வீட்டு சமையல்காரரை அடித்து உதைத்து துன்புறுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து நியூசிலாந்துக்கான இந்திய தூதரையும், அவரது மனைவியையும் நாட்டை விட்டு வெளியேற நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நியூசிலாந்துக்கான இந்திய தூதர் ரவி தபாரின் மனைவி அங்கு தனது வீட்டில் பணியாற்றிய சமையல்கார பெண்மணியை அடித்து நபரை துன்புறுத்தியதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியத் தூதர் ரவி தபார் அந்நாட்டிலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டார். இதனை வெளியுறவுத் துறையும் உறுதி செய்துள்ளது. "இந்திய தூதருக்கு தனிப்பட்ட முறையில் அவரே முன்வந்து அந்நாட்டிலிருந்து வெளியேற அதிகாரம் உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்திற்கான இந்திய தூதர் ரவி தபார். ரவி தபாரும் அவரது மனைவியும் தங்கள் வீட்டு சமையல்காரராக இருந்தவரை நள்ளிரவில் அடித்து துன்புறுத்தியதுடன், வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். வெல்லிங்டனில் உள்ள தூதரக அதிகாரியின் இல்லத்தில் இருந்து வெளியேறிய சமையல்காரர் சுமார் 20 கி.மீ., வரை நடந்து சென்றுள்ளார். மிகவும் பதற்றம் நிறைந்த வெல்லிங்டன் நகரில் எங்கு செல்வதென தெரியாமல் அவர் சுற்றி திரிந்தாக கூறப்படுகிறது. வெலிங்டன் நகர போலீசார் அவரை அழைத்துச் சென்று முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இதனை அடுத்து அவரிடம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இந்தியத் தூதர் ரவி தபார் மனைவி ஷர்மிளா இவரை அடித்து துன்புறுத்தியதாகவும், அதனால் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்துக்கு நடந்த வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸிடம் தெரிவித்தார்.
ஷர்மிளா தன்னை கொத்தடிமையாக வைத்து அடித்து துன்புறுத்தியதாக வெலிங்டன் போலீஸிடம் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண்மணி கடந்த மே மாதம் இந்தியா திரும்பிவிட்டதாகவும் வெலிங்டன் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரவி மீதான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்ததை அடுத்து, அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு நியூசிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே ரவி தபார் மற்றும் அவரது மனைவியிடம் பேட்டி எடுப்பதற்கு அனுமதி அளிக்க போலீசார் அனுமதி அளிக்க மறுத்து வருவதாக நியூசிலாந்து ரேடியோ இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. அதேசமயம், ரவி நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருவதாக போலீசார் தெரிவித்ததாகவும், அந்த இணையதள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவலை நியூசிலாந்து வெளியுறவு விவகாரம் மற்றும் வர்த்தக அமைச்சகமும் உறுதி செய்துள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications