சத்தமே இல்லாமல் 'சரித்திரம்'.. இலங்கை- தமிழகம் இடையே தரைவழிப் பாலம் கட்டுவது குறித்து ஜரூர் ஆய்வு!
யாழ்ப்பாணம்: இலங்கையின் தலைமன்னார் மற்றும் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப் பாலம் கட்டுவது தொடர்பான ஆய்வு நடைபெற்று வருவதாக இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய தூதர் கோபால் பாக்லே வடக்கு பகுதியான யாழ்ப்பாணம், தலைமன்னார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். யாழ்ப்பாணத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த சந்திப்புகள் குறித்து கோபால் பாக்லே கூறியதாவது: இலங்கை- இந்தியா இடையேயான எரிபொருள் குழாய் திட்டம் விரைவில் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. இலங்கையின் வடக்கு பகுதி வழியாக திருகோணமலையை சென்றடையும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
மன்னார் மாவட்டத்தில் தலைமன்னாரில் உள்ள படகு இறங்குதுறை பகுதிகளை ஆய்வு செய்தேன். தலைமன்னார்- தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் இடையேயான கப்பல் சேவையை தொடங்குவது குறித்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும்.
தலைமன்னார்- தமிழ்நாட்டின் தனுஷ்கோடி இடையே தரைவழிப்பாலம் அமைப்பதற்கான திட்டத்தை கைவிடவில்லை. இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் சாத்தியக் கூறுகள் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.
இலங்கையில் மாகாண சபை தேர்தல்களை நடத்த வேண்டும்; இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தின் கீழான 13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கையின் அரசியல் சூழலில் தற்போது 13-வது திருத்த சட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்கிற நிலைமை உள்ளது. முந்தைய ராஜபக்சேக்கள் அரசால் நியமிக்கப்பட்ட பாதுகாப்பு செயலாளரையே தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவால் மாற்ற முடியாத அரசியல் நிலைதான் இலங்கையில் உள்ளது. இவ்வாறு கோபால் பாக்லே கூறினார்.
அண்மையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இலங்கை பயணம் மேற்கொண்டிருந்தார். இலங்கையின் வடக்கு, கிழக்கு ஆகிய தமிழர் பகுதிகளில் நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொண்டார். நிர்மலா சீதாராமன் தமது பயணத்தை நிறைவு செய்த போது சீன தூதர் உள்ளிட்டோரும் இலங்கையின் வடக்கு பகுதிக்கு சென்றனர். இலங்கையின் வடக்கு பகுதியில் சீனா காலூன்ற முயற்சிக்கிறது. இது இந்தியாவின் தென் பகுதி பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமையும் என தொடர்ந்து எச்சரிக்கப்பட்டு வருகிறது.
-
துரந்தர் சம்பவம்.? பாக். கொடூர தீவிரவாதி மசூத் அசார் சகோதரர் மர்ம மரணம்! வரிசையாக விழும் விக்கெட்கள் -
மக்கள்தொகை கணக்கெடுப்பு நாளை முதல் தொடக்கம்.. என்னென்ன ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்! -
இலங்கைக்கு இந்தியா வழங்கிய 38,000 டன் பெட்ரோல், டீசல்.. நெகிழ்ந்து போன இலங்கை அதிபர் -
ஒரே நாளில் துடைத்தெறியப்பட்ட ரூ.10 லட்சம் கோடி.. "எல்லாம் போச்சு.." கதறும் முதலீட்டாளர்கள் -
கச்சா எண்ணெயிலிருந்து எல்பிஜி தயாரிக்க முடியாதா? மீண்டும் மண்ணெண்ணெய் விற்பனை! இந்தியாவுக்கு சிக்கல் -
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ












Click it and Unblock the Notifications