எவரெஸ்ட்டில் சிக்கி உயிரிழந்த 22 மலையேற்ற வீரர்களின் உடல்கள்.. இந்திய ராணுவம் மீட்டது
காத்மாண்ட்: நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலை பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்களை இந்திய ராணுவத்தார் மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. இது மலையேற்றக் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைச்சிகரத்திலும் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்தது.
கடும் பாதிப்பைச் சந்தித்த நேபாளத்திற்கு பல்வேறு நாடுகளும் மீட்புப் பணியில் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்தவகையில், இந்திய ராணுவத்தினர் மெற்கொண்ட மீட்புப் பணியில் 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன.
மேலும், காயமடைந்த நிலையில் 61 பேர் மீட்கப் பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே, எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது அங்கு பனிப்பாறைகள் சரிந்துள்ளதால் அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமே மீட்க முடியும்.
அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர்கள் பலரும் எவரெஸ்ட்டில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கா ஹெலிகாப்டர் வழங்க முன்வந்துள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications