எவரெஸ்ட்டில் சிக்கி உயிரிழந்த 22 மலையேற்ற வீரர்களின் உடல்கள்.. இந்திய ராணுவம் மீட்டது
காத்மாண்ட்: நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலை பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்களை இந்திய ராணுவத்தார் மீட்டுள்ளனர்.
நேபாளத்தில் கடந்த சனிக்கிழமையன்று ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 3000க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால் பலியானவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் இமயமலையையும் விட்டுவைக்கவில்லை. இது மலையேற்றக் காலம் என்பதால் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வீரர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். நேபாள நிலநடுக்கத்தால் எவரெஸ்ட் மலைச்சிகரத்திலும் பனிச்சரிவு ஏற்பட்டது. இது மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த வீரர்களின் முகாம்களை மூழ்கடித்தது.
கடும் பாதிப்பைச் சந்தித்த நேபாளத்திற்கு பல்வேறு நாடுகளும் மீட்புப் பணியில் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அந்தவகையில், இந்திய ராணுவத்தினர் மெற்கொண்ட மீட்புப் பணியில் 22 வெளிநாட்டு மலையேற்ற வீரர்களின் உடல்கள் மீட்கப் பட்டுள்ளன.
மேலும், காயமடைந்த நிலையில் 61 பேர் மீட்கப் பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.
இதற்கிடையே, எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கியுள்ள 1000க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தற்போது அங்கு பனிப்பாறைகள் சரிந்துள்ளதால் அவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமே மீட்க முடியும்.
அமெரிக்காவை சேர்ந்த மலையேறும் வீரர்கள் பலரும் எவரெஸ்ட்டில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்க அமெரிக்கா ஹெலிகாப்டர் வழங்க முன்வந்துள்ளது.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications