சிங்கப்பூரில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கிழித்த இந்தியர் கைது

Subscribe to Oneindia Tamil

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர் ஒருவர் தனது முன்னாள் காதலியான பிலிப்பைன்ஸை சேர்ந்த பணிப்பெண்ணை கத்தியால் தாக்கி காயப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் பாலையன் முருகதாஸ்(41). கட்டுமானப் பணி செக்டரில் வேலை செய்து வருகிறார். அவரும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஆலன் ரெமிடியோஸ் அடோல்போ(38) என்பவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் பிரிந்துவிட்டனர். அடோல்போ சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார்.

Indian arrested and charged for injuring Filipino maid

காதல் முறிவுக்கு பிறகு பாலையன் 7 செ.மீ. நீளமான கத்தியை எடுத்து அலோட்போவின் முகம், இடது மணிக்கட்டு, கழுத்து ஆகிய பகுதிகளில் கிழித்தார். இதனால் படுகாயம் அடைந்த அடோல்போ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகம் ரத்தத்தை இழந்த அடோல்போ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலையனை கைது செய்துள்ளனர். அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது கசையடி கிடைக்கும். போலீசார் பாலையனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+