கொலை செய்வது எப்படி?: இன்டர்நெட்டில் படித்து குடும்பத்தாரை கொன்ற ஐடி மேனேஜர்
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் கழுத்தை எப்படி அறுத்துக் கொலை செய்வது என்பதை இன்டர்நெட்டில் தேடிப் படித்து தனது மனைவி மற்றும் 2 மகள்களை கொன்றுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பிராட்போர்டில் இருக்கும் கிளேட்டன் பகுதியில் வசித்து வந்தவர் இந்தியரான சாப்ட்வேர் என்ஜினியர் ஜிதேந்திரா லாட்(49). அவர் தனது மனைவி துக்ஷாபென்(44), மகள்கள் த்ரிஷா(19) மற்றும் நிஷா(16) ஆகியோருடன் வசித்து வந்தார். பாசமான குடும்பம் என்று அப்பகுதி மக்களிடையே பெயர் எடுத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ம் தேதி ஜிதேந்திரா தனது மனைவி மற்றும் மகள்களை குத்திக் கொலை செய்தார். அதன் பிறகு இரண்டு நாட்கள் அவர்களின் உடலோடு வீட்டில் இருந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த வழக்கு விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.
ஜிதேந்திரா தனக்கு ஐடி மேனேஜராக பதவி உயர்வு கிடைத்ததால் வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அவர் ஒருவரின் கழுத்தை அறுத்து எவ்வாறு கொலை செய்வது என்பதை இன்டர்நெட்டில் தேடிப் படித்துள்ளார். அதன் பிறகு தனது குடும்பத்தாரை கொலை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.