அமெரிக்காவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடி: இந்திய தொழிலதிபருக்கு 30 வருட சிறை
நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியில் தொடர்புள்ள இந்திய தொழிலதிபருக்கு, 30 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் வசிப்பவர் வினோத் டட்லானி (51). இவர் அங்கு ஜுவல்லரி ஷாப் ஒன்று வைத்துள்ளார். இவர்போலியான முகவரியை காண்பித்து 7 ஆயிரத்துக்கும் மேற்பபட்ட கிரெடிட் கார்டுகளை வாங்கியுள்ளார். இதற்கு மேலும் பலரும் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கிரடிட் கார்டுகளை பயன்படுத்தி பல ஷாப்பிங் மால்களில் எவ்வளவு பொருள் வாங்கமுடியுமோ அவ்வளவு பொருட்களை வாங்கி குவித்துள்ளார்.
மொத்தம் சுமார் 200 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இந்த மோசடி நடந்துள்ளது. போலி முகவரியையும், கிரெடிட் ஃபுரொபைலையும் உருவாக்குவதன் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய கிரெடிட் கார்டு மோசடியில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது.
இவரது மோசடி குறித்து தெரியவந்ததும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியபோது செய்த குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டார். இதுகுறித்த வழக்கு நியூஜெர்சி கோர்ட்டில் வழக்கு நடைபெற்றது. மாவட்ட நீதிபதி அன்னே தாம்சன் அளித்த உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட வினோத் டட்லானி மற்றும் அவரது 16 கூட்டாளிகளும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இவர்களுக்கு 30 ஆண்டு சிறை தண்டனையும், 1 மில்லியன் டாலர் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications