ஐஸ்வர்யா ராய் மட்டுமில்லங்க.. இந்தியாவின் உலக அழகிகள் இத்தனை பேர் இருக்காங்க
டெல்லி: உலக அழகி போட்டிகளில் சாதித்த இந்திய பெண்களை பற்றி தெரியுமா உங்களுக்கு. ஐஸ்வர்யா ராய் அதில் பிரபலம் என்றாலும் இன்னும் பல பிரபலங்களும் பட்டியலில் உள்ளனர். கடைசியாக இந்தியா உலக அழகி போட்டியில் வென்றது 2000மாவது ஆண்டு ஆகும்.
முதன் முதலில் இந்தியாவை சேர்ந்த பெண் உலக அழகியானது 1966ம் ஆண்டு. ரெய்டா பரியா என்ற மும்பையை சேர்ந்த அப்போதைய 23 வயது மெடிக்கல் மாணவிதான் இவர். ஆசியாவிலிருந்து தேர்வான முதல் உலக அழகி என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
இதன்பிறகு மீண்டும் உலக அழகி பட்டத்தை வெல்ல நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1994ல் அந்த ஏக்கத்தை போக்கினார் ஐஸ்வர்யா ராய். இதன் பிறகு 1997ல் டயானா ஹேடனும், 1999ல் யுக்தா முகியும், 2000மாவது ஆண்டில் பிரியங்கா சோப்ராவும் உலக அழகிகளாக முடி சூட்டினர்.
இந்திய பெண்களுக்கு தொடர்ச்சியாக உலக அழகி பட்டம் கிடைப்பது, மேக்கப் சாதன சந்தையை குறி வைத்துதான் என்று யாரோ கிளப்பிவிட்டனர். ஆனால் பிரியங்கா சோப்ராவுக்கு பிறகு இந்திய பெண்கள் யாரும் இதுவரை உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்படவில்லை.