இங்கிலாந்து மார்க்கெட்டுக்குள் பஸ்ஸை கொண்டு போய் மோதிய 77 வயது "இந்தியன்" தாத்தா!
லண்டன்: 77 வயதான இந்தியர் ஒருவர் ஓட்டிச் சென்ற டபுள் டெக்கர் பஸ் இங்கிலாந்தில் விபத்துக்குள்ளாகி சூப்பர் மார்க்கெட்டில் போய் மோதியது. இதில் 2 பேர் பலியானார்கள்.
அது ஒரு டபுள் டெக்கர் பஸ் ஆகும். அந்தப் பஸ்ஸை ஓட்டியவர் பெயர் கைலாஷ் சந்தர். இவர் லீமிங்க்டன் ஸ்பா என்ற நகரின் முன்னாள் மேயர் ஆவார். சம்பவத்தன்று பஸ்ஸை ஓட்டிச் சென்ற அவர் கட்டுப்பாட்டை இழந்ததால் பஸ் சாலையோரம் இருந்த மார்க்கெட்டுக்குள் புகுந்து விட்டது. அதில் சிக்கி 8 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

நிலை தடுமாறி ஓடிய அந்த பஸ், முதலில் பிளாட்பாரத்தில் ஏறி, அங்கிருந்து நான்கு விளக்குக் கம்பங்களை மோதிச் சாய்த்து பின்னர் மார்க்கெட்டுக்குள் புகுந்து மோதி நின்றது.
லேபர் கட்சியைச் சேர்ந்தவர் சந்தர். இவர் வார்விக்ஷயர் கவுன்டியில் உள்ள லீமிங்க்டன் ஸ்பா நகர மேயராக இருந்தவர்.
இவர் ஏற்படுத்திய விபத்தால் 8 வயது சிறுவன் ரோவன் பிட்ஸெரால்ட், 70 வயதான டோரா ஹான்காக்ஸ் என்ற பெண் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஸ்டேஜ்கோச் என்ற பஸ் நிறுவனத்தில் 42 ஆண்டு காலம் பணியாற்றியவர் இவர். சிறந்த டிரைவராகவும் இருந்தவர். ஆனால் தற்போது பெரும் விபத்தை ஏற்படுத்தி விட்டார்.
விபத்தில் பலியான சிறுவன் ரோவன், விபத்தை சந்தித்த பஸ்ஸின் மாடிப் பகுதியில் தனது 9 வயது சகோதரனுடன் பயணித்தவன் ஆவான். அதில் சகோதரனுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. மேலும் 6 பேரும் காயமடைந்தனர். அவர்களில் சந்தரும் ஒருவர்.
விபத்தில் உயிரிழந்த இன்னொருவரான மூதாட்டி டோரா, சாலையோரமாக பிளாட்பாரத்தில் நடந்து சென்றவர் ஆவார்.












Click it and Unblock the Notifications