ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி. படித்த இந்திய மாணவி திடீர் மாயம்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்த 30 வயது இந்திய மாணவி திடீர் என்று மாயமாகியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் நடாஷா நரங்(30). அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்.டி. ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டிருந்தார். அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தனது கணவர் சந்தீப்புடன் டாஸ்மானியா மாநிலத்தில் வசிக்கத் துவங்கினார். இந்நிலையில் கடந்த 4ம் தேதி அவரை திடீர் என்று காணவில்லை.
இது குறித்து போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடாஷாவை தேடியபோது அவரது உடமைகள் டாஸ்மானியா மாநிலத்தில் உள்ள ஆற்றங்கரையோரம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் நடாஷாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்திய மாணவர்கள் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளதால் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் மாயமாகி இருக்கலாம் என்று சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கிழக்கு தமார் தேசிய நெடுஞ்சாலையை நடாஷா கடந்து செல்வதை தான் பார்த்ததாக பைக்கில் சென்ற ஒருவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications