இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த கருந்துளை! வெளியான பிரபஞ்ச ரகசியம்
டெல்லி: இந்தியாவின் ஆர்யபட்னா ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் கருந்துளை ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர். கடலில் குண்டூசியை போட்டுவிட்டு தேடும் கதைதான் கருந்துளையை தேடுவது. இருப்பினும் இந்திய விஞ்ஞானிகள் இதனை கண்டுபிடித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
இந்த கருந்துளை பூமியிருந்து 4.2 பில்லியன் ஒளி ஆண்டு தூரத்தில் இருப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது. அதாவது ஒளியின் வேகத்தில் பயணித்தால் இந்த கருந்துளையை சென்றடைய 4.2 பில்லியன் ஒளி ஆண்டுகள் ஆகும்.

நாம் வாழும் பூமி பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ரகசியம். ஆனால் அதைவிட பெரிய பெரிய ரகசியங்கள் எல்லாம் இங்கு இருக்கின்றன. குறிப்பாக கருந்துளை பற்றி நாம் மேலும் அதிகமான விஷயத்தை தெரிந்துக்கொள்ளும்போது அறிவியல் துறையில் நாம் ஓரடி மேலும் முன்னோக்கி வைக்கிறோம். நமது சூரியனை விட அளவில் பெரியதாக இருக்கும் சூரியன்கள் தனது இறுதி காலத்தில் வெடித்து சிதறும். அப்படி நடக்கும்போது அது கருந்துளைகளாக மாறுகிறது.
கருப்பு நிறத்தில் இருக்கும் துளைகள். இருட்டாக இருந்தால் லைட் அடித்து பார்க்கலாமே என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் இந்த துளைக்குள் ஒளி சென்றால் வெளியே வராது. ஒளி பொருட்கள் மீது பட்டு எதிரொலித்தால்தான் அதை நாம் பார்க்க முடியும். ஆனால் இந்த துளையில் ஒளி மாட்டிக்கொண்டால் அதனால் வெளியே வர முடியாது. எனவேதான் இந்த துளை இன்னமும் இருட்டாகவே இருக்கிறது.
பூமியை விட அளவில் 1000 மடங்கு சிறியதாக இருக்கும் கருந்துளை கூட, பூமியை விட பல ஆயிரம் மடங்கு அதிக எடையை கொண்டதாக இருக்கும். ஒரு சேலையை நான்கு பக்கங்களில் பிடித்துக்கொண்டு கனமான இரும்பு உருண்டையை நடுவில் போட்டால் பள்ளம் உருவாகுமே அப்படித்தான் விண்வெளியில் இந்த துளைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த துளையின் முடிவில் என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியாது.
சில விஞ்ஞானிகளோ, கருந்துளையை பயன்படுத்தி காலப்பயணம் செய்யலாம் என்று கூறுகிறார்கள். இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பது தெரியாது. இப்படி கருந்துளைகள் பற்றி ஆய்வுகள் தீவிரமடைந்துக்கொண்டிருக்கையில் இந்தியாவிலிருக்கும் விஞ்ஞானிகள் புதியதாக கருந்துளையை கண்டுபிடித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications