Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமெரிக்க கார் விபத்தில் இந்திய மாணவி உள்பட 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த பயங்கர கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த இளம் மாணவி உள்பட 4 பேர் பலியானார்கள். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சமீப காலத்தில் அமெரிக்காவில் நடந்த மிகப் பெரிய விபத்தாக இது கருதப்படுகிறது. இந்த விபத்துக்குக் காரணம் குடிபோதையில் வாகனத்தை ஓட்டிய பெண்தான் என்று தெரிய வந்துள்ளது.

விபத்தில் இறந்த நான்கு பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 வயதுக் குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தது.

Indian student among 4 killed in US car crash

உயிரிழந்தவர்களில் நிகிதா நகல் என்பவர் இந்தியாவசை் சேர்ந்த மாணவி ஆவார். மும்பையைச் சேர்ந்தவர் இவர். இவர் மத்திய ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.

இந்த விபத்துக்குக் காரணமான 25 வயதான அடாசியா அவெரி சாம்பர்ஸ் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குடிபோதையில் இருந்தது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

ஓக்லஹாமா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கூட்டம் நடந்தது. அதற்காக நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் திரண்டிருந்தனர். அவர்களின் ஊர்வலம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென சாம்பர்ஸ் ஓட்டி வந்த வாகனம் வேகமாக மாணவர்கள் மீது மோதியது. அதற்கு முன்பு ஒரு போலீஸ்காரரின் பைக்கில் மோதினார் சாம்பர்ஸ். இந்த பயங்கர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இவர்களில் 8 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், 9 பேரின் நிலை மோசமாக இருப்பதாகவும், 17 பேர் லேசான காயத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+