வளைகுடா நாடுகளில் அமைதி.. இந்தியர்களுக்கு பெரிய நிம்மதி! ஈரான் எடுத்த நடவடிக்கை!
தெஹ்ரான்: ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தற்போது தற்காலிக போர் நிறுத்தம் சாத்தியமாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு தூது குழுவை ஈரான் அனுப்பியிருக்கிறது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் சயீத் கத்திப்சாதே, அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு ஈரான் தூதுக்குழு செல்வதை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால் வளைகுடா வாழ் இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர்.

அமெரிக்க தூதுக்குழுவை துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் வழிநடத்துவார் என்றும், ஈரான் தூதுக்குழுவை பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் வழிநடத்துவார் என்றும் கத்திப்சாதே தெரிவித்தார். இருதரப்புக்கும் இடையே பாகிஸ்தான் மூலம் இரவு முழுவதும் செய்திகள் பரிமாறப்பட்டதாக அவர் கூறினார். இந்தப் பேச்சுவார்த்தைகள் ஈரானின் தேசிய நலனுக்கு உட்பட்டவை என்றும், அவற்றை நிறைவேற்றுவதில் ஈரான் கவனம் செலுத்தியுள்ளதாகவும் கத்திப்சாதே வலியுறுத்தினார்.
ஈரானை ஒட்டிய பகுதிகளில், அதாவது லெபனான் உட்பட போர் நிறுத்தம் வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தியிருந்தது. இருப்பினும், லெபனான் மீது இன்று இஸ்ரேல் தாக்குதலை நடத்தியிருந்தது. இந்த தாக்குதல், அமெரிக்கா-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீறல் என்று கத்திப்சாதே குற்றம்சாட்டியுள்ளார்.
"நீங்கள் போர் நிறுத்தத்தைக் கோர முடியாது. மறுபுறம் உங்கள் நட்பு நாடு படுகொலையைத் தொடங்கியிருக்கிறது. அமெரிக்கா ஒன்று போரை தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையெனில் போர் நிறுத்தத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை" என்று கத்திப்சாதே கடுமையாக அமெரிக்காவை சாடியுள்ளார். எது எப்படி இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஈரான் அமைதி குழுவை அனுப்பியிருப்பது சர்வதேச அளவில் நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் நிம்மதியடைந்திருக்கின்றனர். இந்த பேச்சுவார்த்தை காலங்களில் வளைகுடா நாடுகள் மீது ஈரான் எந்த தாக்குதலையும் நடத்தது. எனவே, இங்குள்ள இந்தியர்கள் அச்சமடைய வேண்டியதில்லை. முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், போர் தொடர்பாக சில அறிவுறுத்தல்களை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
"நோ என்ட்ரி".. ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடிய ஈரான்.. இஸ்ரேலால் மீண்டும் பதற்றம்.. என்ன நடந்தது? -
எங்களை தொட்டால்.. டிரம்புக்கு எதிராக ஈரான் கையில் 2 பெரிய பிளான்.. சவுதி - கத்தாரும் தப்பாது -
டிரம்ப் அடங்கவே மாட்டார் போல.. "இதுவரை கண்டிராத தாக்குதல் இருக்கு!" ஈரானுக்கு புதிய எச்சரிக்கை -
போர் நிறுத்தம் அறிவித்தாலும் ஈரான் மீது தொடரும் தாக்குதல்.. பதிலடி தாக்குதலும் நடப்பதால் ஓயாத டென்ஷன் -
8 மணி கெடு! ஈரான் கையில் தான் எல்லாமே.. கடைசி நேரத்தில் கைவிரித்த ஜேடி வேன்ஸ்.. டிரம்ப் ஆட்டம்! -
ஈரான் போர் நிறுத்தம்.. சடாரென சரிந்த 17 டாலர் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவுக்கு கொண்டாட்டம்! -
அமெரிக்காவின் மூவ்.. லாக்டவுனில் சிக்கப்போகும் இந்தியா.. இன்னைக்கு நைட்டு விஷயம் தெரிஞ்சிடும்! -
ஈரானுக்கு அமெரிக்கா இறுதி வார்னிங்.. 1973, 1979, 2022-ஐ விட உலகில் மோசமான நிலை வரலாம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஏற்க மறுத்த ஈரான்.. அடுத்து என்ன நடக்கும்? 3 விஷயங்களுக்கு சான்ஸ் -
ஈரானில் விழுந்த அமெரிக்க விமானி! இதய துடிப்பை வைத்து பிடித்த US.. CIAன் 'கோஸ்ட் மெர்மெர்' வேட்டை -
ஈரானுக்கு எதிராக அணு ஆயுதத்தை பயன்படுத்த டிரம்ப் முடிவா? வெள்ளை மாளிகை சொல்வது என்ன? -
சட்டென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை.. சும்மாயில்ல 117டாலர்.. அமெரிக்க பொருளாதாரத்திற்கு ரெட் வார்னிங்?












Click it and Unblock the Notifications