கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்தியர்கள்.. 1998க்கு பிறகு இதுதான் முதல்முறை! ஸ்வீடனில் என்ன நடக்கிறது?
ஸ்டாக்ஹோம்: அதிகமான இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறுகிறார்கள், இந்த ஆண்டின் முதல் பாதியில் புலம்பெயர்ந்த வெளிநாட்டினரில் இந்தியர்கள்தான் அதிகம். ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில், 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறினர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 171% அதிகமாகும். 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஸ்வீடன், இந்த அளவுக்கான இந்தியர்களின் வெளியேற்றத்தை (வருடத்தின் முதல் பாதி கணக்குப்படி) இப்போதுதான் பார்க்கிறது.
டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆலோசகர் பெர்-ஆர்னே விக்ஸ்ட்ராம் கருத்துப்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்வீடனில் 50,000 இந்தியர்கள் வசித்து வந்தனர். இருப்பினும், முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் குடிபெயருவதை விட வெளியேறுகிறார்கள்.

ஸ்வீடன்-இந்திய வணிக கவுன்சிலின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராபின் சுகியா, இந்தப் போக்கு குறித்து கருத்துத் தெரிவித்தார்: "இதற்கு சிறப்புக் காரணம் இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். இருப்பினும் முழு ஆண்டு மதிப்பீட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடனில் அதிக செலவுகள் ஆகிறது. விலைவாசி கூடியுள்ளது. சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் கிடைக்கவில்லை, பொதுவாகவே வீடுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுதான் முக்கிய காரணமாக தெரிகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட பணி அனுமதிகளின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள், இந்திய குடிமக்களுக்கான முதல் முறை வேலைவாய்ப்பு உரிமம் 30% குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் IT பணிநீக்கங்கள் மற்றும் கடுமையான பணி அனுமதி விதிமுறைகள் காரணமாகும்.
20 ஆம் நூற்றாண்டில் மாணவர்கள், தொழிலாளர் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஸ்வீடனில் குடியேறத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் ஸ்வீடிஷ் குடும்பங்களும் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுக்கத் தொடங்கின. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய குடியிருப்பாளர்களின் அதிகரிப்புக்கு குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் அதிகரித்த குடியேற்றச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததாக ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3,681 ஆக இந்தியர்கள் குடியேற்றம் இருந்தது. இந்த வருடம் இது 2,461 ஆகும். கோவிட் காலத்தை தவிர்த்தால், 2017க்குப் பிறகு இப்போது மிக குறைவாக இந்தியாவிலிருந்து, மக்கள் குடியேறியுள்ளனர்.
முன்னதாக, ஐடி போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப ஸ்வீடனின் முயற்சிகள் காரணமாக 2009 முதல் இந்திய குடியேற்றத்தில் நிலையான அதிகரிப்பு இருந்தது. அதிக தகுதி வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்ந்தோரை ஈர்க்க ஸ்வீடன் ஆர்வமாகவே உள்ளது. ஆனால்
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications