கூட்டம் கூட்டமாக கிளம்பும் இந்தியர்கள்.. 1998க்கு பிறகு இதுதான் முதல்முறை! ஸ்வீடனில் என்ன நடக்கிறது?
ஸ்டாக்ஹோம்: அதிகமான இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறுகிறார்கள், இந்த ஆண்டின் முதல் பாதியில் புலம்பெயர்ந்த வெளிநாட்டினரில் இந்தியர்கள்தான் அதிகம். ஜனவரி மற்றும் ஜூன் 2024 க்கு இடையில், 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறினர். இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 171% அதிகமாகும். 1998 ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஸ்வீடன், இந்த அளவுக்கான இந்தியர்களின் வெளியேற்றத்தை (வருடத்தின் முதல் பாதி கணக்குப்படி) இப்போதுதான் பார்க்கிறது.
டெல்லியில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தின் கண்டுபிடிப்பு மற்றும் அறிவியல் ஆலோசகர் பெர்-ஆர்னே விக்ஸ்ட்ராம் கருத்துப்படி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில், ஸ்வீடனில் 50,000 இந்தியர்கள் வசித்து வந்தனர். இருப்பினும், முதல் முறையாக, அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் குடிபெயருவதை விட வெளியேறுகிறார்கள்.

ஸ்வீடன்-இந்திய வணிக கவுன்சிலின் பொதுச் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராபின் சுகியா, இந்தப் போக்கு குறித்து கருத்துத் தெரிவித்தார்: "இதற்கு சிறப்புக் காரணம் இருக்கும் என்றுதான் நினைக்கிறோம். இருப்பினும் முழு ஆண்டு மதிப்பீட்டிற்காக காத்திருக்க வேண்டியிருக்கும். கடந்த சில ஆண்டுகளில் ஸ்வீடனில் அதிக செலவுகள் ஆகிறது. விலைவாசி கூடியுள்ளது. சர்வீஸ் அபார்ட்மென்ட்கள் கிடைக்கவில்லை, பொதுவாகவே வீடுகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது. இதுதான் முக்கிய காரணமாக தெரிகிறது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அதிக தகுதி வாய்ந்த புலம்பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட பணி அனுமதிகளின் எண்ணிக்கை 20% குறைந்துள்ளது. இந்த காலக்கெடுவிற்குள், இந்திய குடிமக்களுக்கான முதல் முறை வேலைவாய்ப்பு உரிமம் 30% குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் IT பணிநீக்கங்கள் மற்றும் கடுமையான பணி அனுமதி விதிமுறைகள் காரணமாகும்.
20 ஆம் நூற்றாண்டில் மாணவர்கள், தொழிலாளர் புலம்பெயர்ந்தோர் மற்றும் புகலிடம் கோருவோர் ஸ்வீடனில் குடியேறத் தொடங்கினர். இந்த காலகட்டத்தில் ஸ்வீடிஷ் குடும்பங்களும் இந்தியக் குழந்தைகளைத் தத்தெடுக்கத் தொடங்கின. 21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்திய குடியிருப்பாளர்களின் அதிகரிப்புக்கு குடும்ப மறு ஒருங்கிணைப்பு மற்றும் அதிகரித்த குடியேற்றச் சட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்ததாக ஐரோப்பிய பல்கலைக்கழக நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 3,681 ஆக இந்தியர்கள் குடியேற்றம் இருந்தது. இந்த வருடம் இது 2,461 ஆகும். கோவிட் காலத்தை தவிர்த்தால், 2017க்குப் பிறகு இப்போது மிக குறைவாக இந்தியாவிலிருந்து, மக்கள் குடியேறியுள்ளனர்.
முன்னதாக, ஐடி போன்ற துறைகளில் தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்ப ஸ்வீடனின் முயற்சிகள் காரணமாக 2009 முதல் இந்திய குடியேற்றத்தில் நிலையான அதிகரிப்பு இருந்தது. அதிக தகுதி வாய்ந்த ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் மற்றும் தொழிலாளர் புலம்பெயர்ந்தோரை ஈர்க்க ஸ்வீடன் ஆர்வமாகவே உள்ளது. ஆனால்
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
பாஜக வேட்பாளர் பட்டியல் வந்ததுமே அண்ணாமலை கொடுத்த முதல் ரியாக்ஷன்!












Click it and Unblock the Notifications