இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை!
இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

ஜகர்த்தா: இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இந்தோனேஷியாவில் சுலவேசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 10 பேர் வரை இதனால் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
[ 2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு! ]
எந்த நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை என்று இன்னும் விரிவாக அறிக்கை அளிக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications