இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை
இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
ஜகர்தா: இந்தோனேசியாவில் பாலித் தீவு மற்றும் கிழக்கு ஜாவா மகாணத்தில் ஏற்பட்ட திடீர் நிலக்கடுத்தினால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அந்நாட்டு அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியிருப்பதாவது: பாலித் தீவு மற்றும் கிழக்கு ஜாவாவில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தினால் அங்குள்ள மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் மலாங் மகாணத்துக்கு தென்கிழக்கான 127 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருந்தது என்றும், கடலுக்கு அடியில் 69 கி.மீ ஆழத்தில் நிலை கொண்டிருந்தது என்றும் அந்நாட்டு வானிலை மற்றும் புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலநடுக்கத்திற்காக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியிருக்கின்றனர். நாட்டின் மேற்குப் பகுதியான பாலி மற்றும் ஜாவாவில் இந்நிலநடுக்கத்தினால் பெரும் நில அதிர்வு தென்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.
இந்த நிலநடுக்கத்தினால் உயிர்ச்சேதமோ அல்லது பொருட்சேதமோ எற்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதி மக்கள் பெரும் பீதிக்குள்ளாகி இருக்கின்றனர் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாலி தீவிற்கு தினமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 2 லட்சம் பேர் வந்து செல்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications