கடலில் தத்தளிக்கும் 7000 முஸ்லீ்ம்களுக்கும் தற்காலிக அடைக்கலம்: மலேசியா, இந்தோனேசியா முடிவு!
கோலாலம்பூர்: நடுக்கடலில் அகதிகளாக தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியா, இந்தோனேசியா நாடுகள் முடிவு செய்துள்ளன.
மியான்மர் உள்நாட்டு கலவரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால் ரோங்கியா முஸ்லிம்கள் பல்லாயிரக்கணக்கானோர் மியான்மரை விட்டு வெளியேறி மலேசியாவுக்குள் நுழைய முயற்சித்து வருகின்றனர்.

இதேபோல் வங்கதேசத்தில் இருந்தும் சட்ட விரோதமாகப் படகுகளில் நூற்றுக் கணக்கான ரோங்கியா முஸ்லிம்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆனால் இந்த அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்க எந்த நாடும் முன்வராததால் அவர்கள் நடுக்கடலில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் இரு பெரிய படகுகளில் புறப்பட்ட மியான்மார் நாட்டவர் மலேசியாவுக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களை மலேசியக் கடற்படையினரும் பின்னர் தாய்லாந்து கடற்படையினரும் விரட்டியடித்தனர். இதனால், அந்தமான் கடல் பகுதிக்கு சென்று அங்கும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், உண்ண உணவும், குடிக்க நீரும் இன்றி ஆயிரக்கணக்கான அகதிகள் மலேசியா மற்றும் இந்தோனேசியா நாட்டு எல்லையருகே நடுக்கடலில் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு உதவ சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்விவகாரம் பற்றி ஆலோசிக்க மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களின் அவசர கூட்டம் இன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் படகுகளில் தத்தளிக்கும் 7 ஆயிரம் பேருக்கு தற்காலிக அடைக்கலம் அளிக்க மலேசியாவும், இந்தோனேசியாவும் ஒப்புதல் அளித்துள்ளன. ஆனால் ஒருவரை கூட தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என தீர்மானமாக தெரிவித்துவிட்ட தாய்லாந்து நாட்டு அமைச்சர், கடலில் காத்திருப்பவர்களுக்கு தேவையான மனிதநேய உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications