தை பொங்கலுக்கு தமிழில் வணக்கம் சொல்லி வாழ்த்திய இங்கிலாந்து, கனடா பிரதமர்கள்
இங்கிலாந்து பல்வேறு வழிகளில் வளர்ச்சி பெற்றதற்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர் என்று தெரசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.
Recommended Video

லண்டன்: பிரிட்டன் வாழ் தமிழர்களுக்கும் உலகத் தமிழர்களுக்கும் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தைப் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் மிகச் சிறப்பான அளவில் உலகமெங்கும் வகிக்கும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிங்கப்பூர், கனடா, இங்கிலாந்தில் பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரிட்டன் வாழ் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு இனிமையானதாக அமையட்டும்" என தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து கூறி வீடியோ பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தெரசா மே உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். தெரசா மே பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
|
தமிழில் வாழ்த்திய தெரசா மே
வணக்கம்.
தைப் பொங்கல் விழா தொடங்குவதால் பிரிட்டன் வாழ் தமிழர்கள் உலகின் பிற பகுதிகளில் உள்ள தமிழ் மக்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பழையன கழிந்து புதிய வாய்ப்புகளை ஆரத்தழுவிக் கொள்ளும் தருணம் இது. உழவுக்கு மட்டும் நன்றி செலுத்தும் நாள் அல்ல இது நமது உறவினர்களுக்கு நண்பர்களுக்கும் அண்டைவீட்டாருக்கும் நன்றி செலுத்தும் நாள் இது.

தமிழ்சமூகத்தில் பங்களிப்பு
பிரிட்டன் வாழ் தமிழர்களின் பங்களிப்புக்கு நாம் அனைவரும் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க இது நல்லதொரு வாய்ப்பு. பிரிட்டன் தமிழ்ச் சமூகத்தின் பங்களிப்பு எதிர்பார்ப்பை விஞ்சியது. பிரிட்டன் மக்களின் வாழ்க்கையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

பொங்கல் பண்டிகை
இத்தேசம் அனைத்து மக்களுக்கும் வாய்ப்புகளை நல்கி அவரவர் லட்சியங்களை அடைய உதவும் தேசமாக இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பிரிட்டனை பன்முகத்தன்மை கொண்ட நாடாக ஆக்கியதில் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அற்புதமானது. எனவே, பொங்கல் பண்டிகை கொண்டாடும் பிரிட்டன் தமிழர்களுக்கும் உலக தமிழர்களுக்கும் தைப் பொங்கல் வாழ்த்துகள் என்று அவர் கூறியுள்ளார்.
கனடா பிரதமர் வாழ்த்து
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடூ தமிழில் வாழ்த்து கூறி பேசியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தை தமிழர் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்க நாடாளுமன்றத்தில் முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ள அவர், கனடாவின் வலிமையிலும் செழுமையிலும் தமிழர்களின் பங்கு மகத்தானது என தெரிவித்துள்ளார்.

தை திருநாள் வாழ்த்து
தனது குடும்பத்தின் சார்பில் தமிழர்களுக்கு இனிய தைப் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் கனடா பிரதமர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய பொங்கல் வாழ்த்து செய்திக்கு பல்வேறு தரப்பினரும் நன்றியை தெரிவித்து உள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications