அஜ்மானில் கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி: கோப்பையை வென்ற துபாய் பிட்ஸ் பிலானி கல்லூரி
Subscribe to Oneindia Tamil
அஜ்மான்: அஜ்மானில் நடந்த கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றது.

அஜ்மான் கல்ஃப் மருத்துவ பல்கலைக்கழகத்தில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது. 15-வது ஆண்டாக நடந்த இந்த போட்டியில் 27 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட், கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்காக தனித்தனியாக நடத்தப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை துபாய் பிட்ஸ் பிலானி பொறியியல் கல்லூரி அணி பெற்றது.

அந்த அணிக்கு கல்லூரியின் நிர்வாக தலைவர் பேராசிரியை கீதா அசோக் கோப்பையை வழங்கி கௌரவித்தார்.












Click it and Unblock the Notifications