விடாமல் துரத்தும் ஈரான்.. சீறிப்பாய்ந்த 3 ஏவுகணை.. அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்.. பகீர்!
ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
Recommended Video
டெஹ்ரான்: ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மூன்று ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.
ஈரான் - அமெரிக்கா இடையில் மீண்டும் போர் வருவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை பெரிதாகாமல் அமைதியாக இருந்தது. நேற்று இரவு இந்த சண்டை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த சில வாரம் முன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

மோசமான தாக்குதல்
அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது ஜனவரி 3ம் தேதி. இந்த தாக்குதலில் உக்ரைன் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் 170 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் வரிசையாக இரண்டு முறை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது.

ஈரான் எப்படி
மீண்டும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த இரண்டு தாக்குதலிலும் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஈரானின் புதிய குவாட்ஸ் படை தளபதியாக இஸ்மாயில் குவானி அமெரிக்காவை கண்டிப்பாக பழி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இவர் கொல்லப்பட்ட தளபதி சுலைமானிக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அமெரிக்காவை தாக்க அவர் உறுதியாக உள்ளார்.

எப்படி நடந்தது
இந்த நிலையில் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மூன்று ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈராக்கில் பாக்தாத்தில் உள்ள தூதரகம் ஆகும் இது. இந்த தாக்குதல் நடந்த போது, அங்கு அமெரிக்க அதிகாரிகள் யாரும் இல்லை. போர் பதற்றம் காரணமாக இந்த தூதரக அதிகாரிகள் எல்லோரும் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

தூதரக அதிகாரிகள்
ஆனாலும் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார். மொத்தம் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளில், ஒன்று தூதரகம் அருகே இருக்கும் காபி ஷாப் மீது விழுந்துள்ளது. மீதமுள்ள இரண்டு ஏவுகணைகள், தூதரகம் அருகே இருக்கும் இரண்டு கட்டிடங்கள் மீது விழுந்துள்ளது. ஆனால் எந்த ஏவுகணையும் தூதரகம் மீது விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்கா எப்படி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications