நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!
தெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா - ஈரான் மத்தியில் அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த வேளையில், பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் போரை முடிவுக்கு கொண்டு வரலாம் என முடிவு செய்த நிலையில் கடந்த வாரம் இஸ்ரேல் துவங்கிய அதிரடி தாக்குதல் மீண்டும் போர் தாக்குதலை துவங்கியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பஹ்ரைன், குவைத் மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் ஈரான் ராணுவ படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

தாக்குதலின் பின்னணி என்ன?
செவ்வாய்க்கிழமை, அமெரிக்காவின் 'அப்பாச்சி' (Apache) ரக ஹெலிகாப்டர் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் உள்ள தீவுகள் மற்றும் துறைமுகங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலில் ஈரானின் 'சிரிக்' (Sirik) நகரில் உள்ள ஒரு டெலிகாம் டவர் மற்றும் இரண்டு குடிநீர் தொட்டிகள் சேதமடைந்தன. தனது நாட்டின் மீது அமெரிக்கா நடத்திய இந்தத் தாக்குதலுக்குப் பழிவாங்கவே, அமெரிக்க தளங்களை ஈரான் குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளது.
என்ன நடந்தது?
ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தத் தாக்குதல் மூன்று முக்கிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது:
1. பஹ்ரைன்: அங்குள்ள அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
2. குவைத்: அலி அல் சலேம் (Ali Al Salem) விமானப்படை தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
3. ஜோர்டான்: அஸ்ராக் (Azraq) பகுதியில் உள்ள விமானப்படை தளம் மீது நீண்ட தூர ஏவுகணைகள் வீசப்பட்டன.
பெரும் பாதிப்பு
அமெரிக்காவின் மொத்தம் 21 இலக்குகளைத் தாக்கியதாகவும், அதில் 4 முக்கிய இடங்களை முழுமையாக அழித்துவிட்டதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. குறிப்பாக, ஜோர்டானில் உள்ள தளத்தில் அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானங்களை நிறுத்தி வைக்கும் தளம் (Hangar) அழிக்கப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது.
மேலும், ஈரானின் 'ஜாம்' (Jam) நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் MQ-9 ரக ட்ரோன் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியதாக ஈரான் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
பஹ்ரைனில் சைரன் சத்தம்
ஈரானின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து, பஹ்ரைன் நாட்டில் போர் அபாய எச்சரிக்கை சைரன்கள் (Sirens) இரண்டாவது முறையாக ஒலிக்கப்பட்டுள்ளன. மக்கள் அனைவரும் பதற்றப்படாமல் இருக்குமாறும், உடனடியாக தங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானைத் தாக்கியதில் இருந்து இந்தப் போர் தொடங்கி நடந்து வருகிறது. இந்த மோதலால் உலகப் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை உலகெங்கும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக டாலர் மதிப்பு அதிகரித்து மிகவும் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஈரானின் எச்சரிக்கை
அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அமெரிக்காவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. மேலும், போர் பதற்றம் அதிகரிப்பதற்கு வாஷிங்டன் (அமெரிக்கா) தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஈரான் கூறியுள்ளது.
தற்போது இஸ்ரேல் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே மோதல் முற்றியுள்ள நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையிலான இந்த நேரடித் தாக்குதல் உலக நாடுகளைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதனால் போர் நிறுத்தம் குறித்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளும் மந்தமாகவே நடந்து வருகின்றன.
-
டிரம்ப் போட்ட அந்த ஒரு போஸ்ட்.. கப்சிப் ஆன ஈரான்.. மத்திய கிழக்கில் ஒரே நேரத்தில் எல்லாம் மாறுதே -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
ஹார்முஸ் மூடினாலும் கவலையில்லை! பேக்கப் இருக்கு.. 'worst-case' வந்தால்.. ஹர்தீப் சிங் பூரி சொன்ன பதில்! -
குட்டையை குழப்பிய இஸ்ரேல்.. செங்கடலில் உச்சக்கட்ட பதற்றம்! போர் இப்போதைக்கு முடியாது போல! -
இஸ்ரேல் - ஈரான் இடையில் திடீர் போர் நிறுத்தம்! பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அதிரடி அறிவிப்பு! -
ஹார்முஸ், பாப் அல்-மண்டெப் இரண்டையும் மூடிய ஈரான்..? மொத்த வர்த்தகமும் முடக்கம்.. உலக நாடுகள் ஷாக் -
ஈரானுக்கு பயணம் வேண்டாம்.. அங்குள்ள இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்.. மத்திய அரசு அவசர அறிவுறுத்தல் -
டிரம்ப் எச்சரிக்கையை மதிக்காத இஸ்ரேல்.. ஈரான் மீது சரமாரி அட்டாக்.. அமைதி பேச்சுவார்த்தை உடைகிறதா? -
நள்ளிரவில் மீண்டும் வெடித்த போர்.. இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்.. போர் நிறுத்தம் காலி? -
ஈரான் கொடுத்த கடைசி வார்னிங்.. இஸ்ரேல் செயலால் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளும் பீதி! -
டொனால்ட் டிரம்ப் 'நான்தான் பாஸ்'.. டிரம்ப் சொல்லியும் கேட்காத இஸ்ரேல் நெதன்யாகு.. புதிய தலைவலி! -
ஈரானின் சர்ப்ரைஸ் தாக்குதல்.. ஆடிப்போன இஸ்ரேல் கொடுத்த பதிலடி.. 3 நகரங்களில் மக்கள் அலறல்!












Click it and Unblock the Notifications