முதல் முறையாக கத்தாரில் காதர் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. அது எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது?
தோஹா: தனது நட்பு நாடு என்று கூட பார்க்காமல் ஈரான், கத்தாரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதல் முறையாக வீசியிருக்கிறது. மொத்தம் ஆறு ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் வீசியது. இதில் யாருமே காயம் அடையவில்லை என்றும், எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனிடையே ஈரான் வீசிய காதர் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.. அதன் பலம் பற்றி பார்ப்போம்
ஈரானால் "காதர்" என்று அழைக்கப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை நடுத்தர இலக்குகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்படுகிறது.' காதர்-110 என்ற ஏவுகணையை அதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். இந்த ஏவுகணைகள் ஷஹாப்-3 ஏவுகணையின் தொடர்ச்சி அல்லது அதன் வழித்தோன்றல் என்று கூறலாம். ஈரானின் மற்ற ஏவுகணைகளை ஒப்பிடும் போது, அதிக அளவில் தந்திரமாக செயல்படும். மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிவிடும் வல்லமை உடையது. மேலும் காதர் ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயக்கப்படுகிது. இது ஒரே சமயத்தில் 650 கிலோ முதல் 1000 கிலோ வரை எடையுள்ள வெடிமருந்துகளை ஏற்றி செல்லும் வல்லமை உடையவை ஆகும்.

ஈரானின் வலிமையான ஏவுகணையான காதர்-110, 1,950 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் வலிமை உடையதாகும். இது பாலிஸ்டிக் ஏவுகணை என்பதால் இரசாயனம் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுக்கு இந்த ஏவுகணைகளை மாற்றியமைக்க முடியும். ஷஹாப்-3 என்ற ஈரானின் பிற ஏவுணகளை ஒப்பிடும் போது, வெறும் 30 நிமிடத்தில் இலக்கை தாக்கிவிடும். ஈரான் கடந்த 2004 முதல் காதர் ஏவுகணைத் தொடரை உருவாக்கி வருகிறது. 330 கிமீ இலக்கில் தாக்கும் வல்லமை உடைய கப்பல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணையும் உள்ளது.
ஈரான் நேற்று இரவு நடத்திய ஏவுகணை தாக்குதலையடுத்து கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடியிருக்கின்றன. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று கூறியுள்ளார்.











Click it and Unblock the Notifications