முதல் முறையாக கத்தாரில் காதர் ஏவுகணைகளை வீசிய ஈரான்.. அது எந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது?
தோஹா: தனது நட்பு நாடு என்று கூட பார்க்காமல் ஈரான், கத்தாரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை முதல் முறையாக வீசியிருக்கிறது. மொத்தம் ஆறு ஏவுகணைகளை அமெரிக்காவின் விமானப்படை தளத்தை குறிவைத்து ஈரான் வீசியது. இதில் யாருமே காயம் அடையவில்லை என்றும், எந்த பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனிடையே ஈரான் வீசிய காதர் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது.. அதன் பலம் பற்றி பார்ப்போம்
ஈரானால் "காதர்" என்று அழைக்கப்படும் பாலிஸ்டிக் ஏவுகணை நடுத்தர இலக்குகளை குறிவைத்து தாக்க பயன்படுத்தப்படுகிறது.' காதர்-110 என்ற ஏவுகணையை அதற்கு சிறந்த உதாரணமாக கூறலாம். இந்த ஏவுகணைகள் ஷஹாப்-3 ஏவுகணையின் தொடர்ச்சி அல்லது அதன் வழித்தோன்றல் என்று கூறலாம். ஈரானின் மற்ற ஏவுகணைகளை ஒப்பிடும் போது, அதிக அளவில் தந்திரமாக செயல்படும். மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிவிடும் வல்லமை உடையது. மேலும் காதர் ஏவுகணைகள் திரவ எரிபொருளால் இயக்கப்படுகிது. இது ஒரே சமயத்தில் 650 கிலோ முதல் 1000 கிலோ வரை எடையுள்ள வெடிமருந்துகளை ஏற்றி செல்லும் வல்லமை உடையவை ஆகும்.

ஈரானின் வலிமையான ஏவுகணையான காதர்-110, 1,950 கிமீ தூரம் வரை சென்று தாக்கும் வலிமை உடையதாகும். இது பாலிஸ்டிக் ஏவுகணை என்பதால் இரசாயனம் அல்லது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறனுக்கு இந்த ஏவுகணைகளை மாற்றியமைக்க முடியும். ஷஹாப்-3 என்ற ஈரானின் பிற ஏவுணகளை ஒப்பிடும் போது, வெறும் 30 நிமிடத்தில் இலக்கை தாக்கிவிடும். ஈரான் கடந்த 2004 முதல் காதர் ஏவுகணைத் தொடரை உருவாக்கி வருகிறது. 330 கிமீ இலக்கில் தாக்கும் வல்லமை உடைய கப்பல் எதிர்ப்பு கப்பல் ஏவுகணையும் உள்ளது.
ஈரான் நேற்று இரவு நடத்திய ஏவுகணை தாக்குதலையடுத்து கத்தார், பஹ்ரைன், எகிப்து, குவைத், ஈராக் மற்றும் சவுதி அரேபியா தங்களது வான்வெளியை மூடியிருக்கின்றன. அண்டை நாடான பக்ரைனில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட கத்தார் நாடு செய்துள்ள அனைத்திற்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தில் இன்று நடந்த தாக்குதலை பொறுத்தவரை எந்த அமெரிக்கர்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதைத் தவிர, மிக முக்கியமாக, எந்த கத்தார் மக்களும் கொல்லப்படவில்லை அல்லது காயமடையவில்லை என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று கூறியுள்ளார்.
-
அமெரிக்க அதிபர் டிரம்பின் ராஜதந்திரம்.. கண்டுபிடித்த ஈரான்.. அடுத்த நொடியே தலைகீழான எண்ணெய் விலை -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கண் கொத்தி பாம்பாக காத்திருக்கும் CIA & மொசாட்.. கொஞ்சம் அசந்தாலும் ஈரான் மொத்தமாக சிதஞ்சிடும் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
இரண்டாக பிளந்த விமானம்.. விமான நிலையத்தில் மோசமான விபத்து.. திடீர் பரபரப்பு! -
ஈரான் சரியான புத்திசாலித்தனம்.. அமெரிக்கா போரை வைத்தே.. கோடி கோடியாக கூடுதலாக சம்பாதிக்கும் வித்தை -
Hormuz: ஹார்முஸ் ஜலசந்தி திறக்குமா? திறக்காதா? 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் அளித்த ரிப்ளை -
3ம் உலகப்போர் வாசலில் நிற்கும் உலகம்? ஈரானை வீழ்த்த அணு குண்டை கையில் எடுக்கும் இஸ்ரேல், அமெரிக்கா? -
இருளில் மூழ்கும் ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியால் 48 மணிநேர கெடுவுடன் டிரம்ப் மிரட்டல்! ஷாக் அறிவிப்பு -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!












Click it and Unblock the Notifications