Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த இடத்தில் சிக்கிய வாட்டர்பாட்டில்.. மனைவிக்கு பயந்து டாக்டரிடம் உண்மையை மறைத்த கணவர்!

ஈரானில் ஆசனவாயில் சிக்கிய வாட்டர்பாட்டிலை சாமர்த்தியமாக வெளியில் எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: மனைவிக்கு பயந்து கொண்டு, ஆசனவாயில் வாட்டர்பாட்டில் மாட்டிக் கொண்டதை வெளியில் சொல்லாமல் 50 வயது முதியவர் மறைத்த சம்பவம் ஈரானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'என் மனைவிக்கு தெரிஞ்சா திட்டுவாப்பா..' என சில கணவர்கள் மனைவிக்கு பயந்து கொண்டு சில செயல்களைத் தவிர்ப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஒரு சிலர் திருட்டுத்தனமாக மனைவிக்கு பிடிக்காததைச் செய்துவிட்டால், முடிந்தவரை அது மனைவியின் காதுக்குப் போகாதவாறு பார்த்துக் கொள்வார்கள். ஆனால், ஈரானிலோ ஒரு கணவர் தன் மனைவிக்குப் பயந்து தன் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் இருந்ததையே மறைத்துள்ளார் ஒரு கணவர்.

இரண்டு மூன்று நாட்களாகத் தனது கணவர் சரியாகச் சாப்பிட முடியாமல், மலம் கழிக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்து, அவரை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் அந்த மனைவி.

ஸ்கேன்

ஸ்கேன்

அப்போதும் நடந்தது என்ன என்பதை மருத்துவரிடமோ அல்லது தன் மனைவியிடமோ அந்தக் கணவர் கூறவில்லை. மருத்துவரிடம் சரியாக மலம் கழிக்க இயலவில்லை, பசிக்கவில்லை என்று மட்டும் திரும்பத் திரும்ப அவர் கூறியிருக்கிறார். எனவே, அந்தக் கணவரின் உடலில் என்ன பிரச்சினை எனத் தெரிந்து கொள்வதாக, அவரது வயிற்றுப்பகுதியை ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர் மருத்துவர்கள்.

வாட்டர்பாட்டில்

வாட்டர்பாட்டில்

அப்போது அவரது ஆசனவாயில் வாட்டர்பாட்டில் ஒன்று சிக்கியிருப்பதைப் பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 250 மிலி நீரை நிரப்பும் 19 செமீ நீளம் இருந்த அந்த பாட்டில் எப்படி ஆசனவாயில் சிக்கியது என்பதை, கையும் களவுமாக மாட்டியபிறகும், அந்தக் கணவர் கூற மறுத்துள்ளார். அவருக்கு தன் ஆசனவாயில் வாட்டர்பாட்டில் இருப்பது தெரிந்தும், அதைத் தன் மனைவியிடம் கூறினால் அவர் நிச்சயம் திட்டுவார் என அவரிடம் மறைத்து வந்துள்ளார்.

மருத்துவக் கண்காணிப்பு

மருத்துவக் கண்காணிப்பு

பின்னர் ஒருவழியாக அறுவைச் சிகிச்சை இல்லாமலேயே, ஆசனவாய் வழியாகவே மருத்துவர்கள் அந்த வாட்டர்பாட்டிலை வெளியில் எடுத்து விட்டனர். நல்லவேளையாக ஆசனவாய் வழியாக குடலில் சிக்கியிருந்த அந்த வாட்டர்பாட்டிலால் அவரது உடலுக்கு வேறு எந்த ஆபத்தான பிரச்சினையும் ஏற்படவில்லை. மூன்று நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைத்து விட்டு அவரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர் மருத்துவர்கள்.

மனநல சிகிச்சை

மனநல சிகிச்சை

அந்த வாட்டர்பாட்டிலை சம்பந்தப்பட்ட நபரே உள்ளே செலுத்தியிருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் கணிப்பு. சிலர் பாலியல் திருப்திக்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த நபர் அதுபோன்ற காரணங்களுக்காக அப்படிச் செய்தாரா அல்லது வேறு ஏதேனும் மனநலப் பிரச்சினையா என்பது தெரியவில்லை. எனினும் அவருக்கு மனநல சிகிச்சை எடுத்துக் கொள்ளவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+