மிகப்பெரிய அமெரிக்க உளவு நெட்வொர்க்கை காலி செய்த ஈரான்.. உளவாளிகள் அதிரடி கைது
Recommended Video
தெஹ்ரான்: அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பு (சிஐஏ), ஈரான் உள்ளிட்ட சில நாடுகளில், நடத்தியதாக கூறப்படும் ஒரு பெரிய இணைய உளவு நெட்வொர்க்கை, ஈரான் அரசு கண்டுபிடித்துள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக அமெரிக்காவை சேர்ந்த பல உளவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த வியாழக்கிழமை ஓமன் வளைகுடாவில் உள்ள இரண்டு எண்ணெய் டேங்கர்களை, ஈரான் தாக்கியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா-ஈரான் நடுவே, பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால், இந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பில்லை என்று, ஈரான் மறுக்கிறது.

இந்த நிலையில், ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி திங்களன்று கூறுகையில் "பல்வேறு நாடுகளில் சிஐஏவின் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்த மிகவும் வலுவான, சிஐஏ இணைய உளவு வலையமைப்புகளில் ஒன்று ஈரானிய உளவு அமைப்புகளால், அண்மையில், கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்று பகீர் தகவலை தெரிவித்தார்.
சிஐஏ உளவாளிகளை, அடையாளம் காணவும் கைது செய்யவும் வழிவகுத்த எங்கள் நட்பு நாடுகளுடன், அமெரிக்காவின், நெட்வொர்க் பற்றிய தகவல்களை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், என்று ஷம்கானி மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், எத்தனை சிஐஏ ஏஜென்ட்டுகள் கைது செய்யப்பட்டார்கள் மற்றும் எந்ததெந்த நாடுகளில் அவர்கள் சிக்கினார்கள் என்பதை, ஷம்கானி தெரிவிக்கவில்லை. இந்த வழக்கை பற்றி சில தகவல்களை அமெரிக்கா வெளியிட்டது. பொது விழிப்புணர்வுக்காக ஈரான் இப்போது அந்த தகவலை வெளியிட முடியும் என்றார் ஷம்கானி.
ட்ரம்ப், கடந்த ஆண்டு ஈரானுடனான சர்வதேச அணுசக்தி உடன்படிக்கையில் இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொண்டார். ஈரானின் பொருளாதாரம், சர்வதேச கச்சா எண்ணெய் விற்பனையில் உள்ளது. எனவே, அதன் பொருளாதரத்தை நசுக்கும் முயற்சிகளில், ட்ரம்ப் அரசு ஈடுபட்டு வருகிறது.
ஒரு கேரியர் ராணுவ குழு மற்றும் குண்டுவீச்சுக்கு தேவையான, வாகனங்களை மத்திய கிழக்கில் நிறுத்தியதுடன், 1,500 ராணுவ வீரர்களையும் அனுப்பி வைத்துள்ளது அமெரிக்கா. இதன் மூலம் ஈரானில் பதற்றமான நிலை நீடித்து வருகிறது.
-
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
ஈரானை மொத்தமாகக் கைப்பற்றத் திட்டம் போடும் அமெரிக்கா.. டிரம்ப் சொன்ன ஷாக்கான விஷயம்! -
ஈரான்-ஐ துவம்சம் செய்யபோகும் அமெரிக்கா! இன்று இரவே தாக்குதல் டொனால்ட் டிரம்ப் பரபர 'வார்னிங்'! -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர் -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா!












Click it and Unblock the Notifications