இதுதான் சான்ஸ்.. பாலஸ்தீனம் சுதந்திர நாடாக மாறனுமா? ஐடியா சொன்ன இந்தியா! திரும்பும் உலக நாடுகள்
டெல்லி: இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான யுத்தத்தில் பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தான் பாலஸ்தீனம் சுதந்திர நாடாக மாற வேண்டும் என்றால் இந்த ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை முக்கிய அட்வைஸ் வழங்கி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இன்று 6 வது நாளாக யுத்தம் நடந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பாலஸ்தீனத்தின் காசா பகுதியாகும். இந்த இடம் தற்போது ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த இடத்தை கைப்பற்ற இஸ்ரேல் முயற்சிக்கிறது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே மோதல் என்பது நடந்து வருகிறது. கடந்த சனிக்கிழமை ஹமாஸ் தீவிரவாத அமைப்பு இஸ்ரேல் மீது 5 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
தற்போது வரை 2000க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இன்னும் மோதல் நீடிப்பதில் பலி எண்ணிக்கை என்பது இன்னும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது காசாவை முற்றுகையிட்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. காசா பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இருட்டில் மக்கள் வசிக்கும் நிலையில் உணவு, மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் மோதல் தொடங்கிய நாளிலேயே இதனை பிரதமர் மோடி வெளிப்படையாக அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் பேசி இந்தியா இஸ்ரேலுடன் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் குறித்த இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அரிந்தம் பாக்சி கூறியதாவது:
‛‛பாலஸ்தீனம் சுதந்திர நாடாக செயல்பட இந்தியா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. பாலஸ்தீனத்தை பொறுத்தவரை இஸ்ரேலுடன் இணைந்து பாதுகாப்பான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட எல்லையை பகிர்ந்து கொள்ள வேண்டும். எல்லை பகுதியை நிர்ணயம் செய்து சுதந்திரமான நாடாக பாலஸ்தீனம் செயல்பட இஸ்ரேலுடன் மீண்டும் நேரடி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என இந்தியா பரிந்துரை செய்கிறது. அதேவேளையில் பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் எதிர்த்து போராட வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
‛ஆபரேஷன் அஜய்' திட்டத்தின் மூலம் இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்களை விமானத்தில் அழைத்து வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலில் இருந்து புறப்பட்ட முதல் விமானம் இன்று நம் நாட்டுக்கு வர உள்ளது. இந்த விமானத்தில் இந்தியர்கள் நாடு திரும்ப தூதரகங்களை தொடர்பு கொள்ள வேண்டும்'' என்றார்.
-
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications