ஹமாஸ் தலைவர் மரணத்துடன் போர் முடிகிறதா? பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும்?
காசா: காசா மீதான தாக்குதலில், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வார் இஸ்ரேல் படைகளால் நேற்று கொல்லப்பட்டார். இந்த மரணத்துடன் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதெல்லாம் முடியாது, போர் நிச்சயம் தொடரும் என இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்நிலையில் பாலஸ்தீனத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் தொடர் ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் எனும் ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழு தாக்குதல் நடத்தியது. இதில் ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பலர் பணய கைதிகளாகவும் பிடித்து செல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் இஸ்ரேலின் ஈகோவை தூண்டிவிட்டது. எனவே, ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறோம். அதற்காக பாலஸ்தீனம் மீது போர் தொடுக்கிறோம் என அந்நாட்டின் ராணுவம் களத்தில் இறங்கியது. போர் தொடங்கி ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில், இதில் சம்பந்தமே இல்லாத சுமார் 41,000க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்தனர்.
இறுதியாக கடந்த வியாழக்கிழமையன்று இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தலைவர் யாஹா சின்வாரை ராஃபாவில் வைத்து கொன்றது. அவரது கொலையுடன் போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போர் இப்போதுதான் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறி, பதற்றத்தை ஏற்படுத்தினார். அதாவது ஹமாஸ் படையினர் பிடித்து சென்ற பணய கைதிகளை மீட்கும் வரை போர் முடியாது என்று இஸ்ரேல் கூறியுள்ளது. எனவே காசா மீது தாக்குதல் நீடித்து வருகிறது.
மறுபுறம், ஹமாஸ் தரப்பில் புதிய தலைவரை அறிவிக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஷுரா கவுன்சில் இந்த வேலையை கையில் எடுத்திருக்கிறது. இந்த கவுன்சில்தான் ஹமாஸின் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்கும். சின்வாரும் இப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான். தற்போது தேர்ந்தெடுக்கப்பட உள்ள புதிய தலைவர், காசாவில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. வெளியிலிருந்து கூட தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம்.
ஆனால், அவர் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ளும் அளவுக்கு தகுதியும், அதிகாரமும் படைத்தவராக இருக்க வேண்டும். இப்போதைக்கு லிஸ்ட்டில் இருவரின் பெயர் அடிப்பட்டிருக்கிறது. ஒன்று கலீத் மெஷால், மற்றொன்று ஷூரா கவுன்சிலின் தலைவராக இருக்கும் முகம்மது டார்விஷ். இதில் கலீத் மெஷால் ஏற்கெனவே ஹமாஸுக்கு தலைமை தாங்கியிருக்கிறார். ஹமாஸின் அரசியல் தலைவராக இருந்து கொல்லப்பட்ட ஹனியேவுடன் இணைந்து பணியாற்றிய அனுபவத்தையும் கொண்டவராவார்.
இருவரியில் எவரேனும் ஒருவர் தலைவராக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இஸ்ரேலை பொறுத்த வரை ஆயுதங்களை போட்டுவிட்டு, பணய கைதிகளை விடுவித்தால் போர் நிறுத்தம் சாத்தியம் என்று சொல்லப்பட்டிருந்தது. ஆனால் புதிய தலைவரை விரைவில் ஹமாஸ் அறிவிக்க இருப்பதால், இப்போதைக்கு இந்த போர் முடிவுபெறாது என்று சொல்லப்படுகிறது.
-
‘குட்டி இந்தியா’வை தாக்கிய ஈரான்.. திடீர் கோபம் ஏன்? இஸ்ரேல் டிமோனோ அட்டாக்கின் பின்னணி -
"ஜாம்பி" கப்பல்.. ஹார்முஸை கடந்து சென்ற மர்மம்.. நடுவில் சம்பந்தமே இல்லாமல் சிக்கும் இந்தியா? -
இஸ்ரேலை கதறவிட்ட ஈரான்.. அணு சக்தி மையத்தை குறிவைத்து கடும் ‘அட்டாக்’.. பதிலுக்கு பதிலால் பதற்றம் -
"ஹார்முஸை கடக்க ரூ.18 கோடி.." கப்பல்களிடம் சுங்க கட்டணம் வசூலிக்க முடிவு செய்த ஈரான்! பயங்கர பிளான் -
போச்சு.. ஈரானின் ஈரலை அறுத்த அமெரிக்கா! நடன்ஸ் அணுமையம் மீது இஸ்ரேல் அட்டாக்! நெருங்கும் கிளைமேக்ஸ்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி












Click it and Unblock the Notifications