நம்ம பூமிக்கு மேலே 4 வகையான உயிரினங்கள் இருக்காமே... யாருக்காச்சும் தெரியுமா??
லண்டன்: நமது பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் 4 வகையான உயிரினங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மில்டன் வெய்ன்ரைட் கூறியுள்ளார். இவர் ஷெப்பீல்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆவர்.
இவர் பெரிய ராட்சத பலூன் ஒன்றைப் பயன்படுத்தி அதன் மூலம் தூசுகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
பூமிக்கு மேலே 25 மைல் தொலைவில் அதாவது 40 கிலோமீட்டர் மேலே உயிரினங்கள் இருப்பதாக இவர் கூறுகிறார்.

வேற்றுகிரகவாசிகளாம்:
இதுவரை 4 வகையான உயிரினங்களைக் கண்டறிந்துள்ளதாகவும், இவை வேற்று கிரக உயிரினங்கள் என்றும் இவற்றை டிஎன்ஏ சோதனை மூலம் தான் உறுதிப்படுத்தியதாகவும் கூறுகிறார்.

இரண்டு ஆண்டுகளாக சோதனை:
கடந்த 2013ம் ஆண்டு முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார் மில்டன். தனது கண்டுபிடிப்புகளை நிரூபிக்க இவர் விஞ்ஞான சமுதாயத்திடம் போராடி வருகிறார். ஆனால் இவரது கூற்றுக்களை இதுவரை யாரும் ஏற்கவில்லை.

மிகப்பெரிய உயிரினங்கள்:
ஆனால் பூமியின் மேலே வேற்று உயிரினங்கள் உள்ளன என்பது இவரது வாதமாகும். தற்போது கண்டுபிடித்துள்ள 4 வகையான உயிரினங்களும், மிகப் பெரியவை என்றும் இவர் கூறுகிறார்.

பெயர் பேய்த்துகள்களாம்:
இந்த உயிரினங்கள் இங்கு பல காலமாக வாழ்ந்து வருவதாகவும் இவர் நம்புகிறார். கோஸ்ட் பார்ட்டிக்கிள்ஸ் என்று இவர் இதற்குப் பெயர் வைத்துள்ளார்.

அதெல்லாம் சுத்த கப்சா:
ஆனால் இது சுத்த கப்சா என்று விஞ்ஞானிகள் கூறி விட்டனர். இவர் பூமியில் உள்ள பொருட்களை வைத்து ஆய்வு நடத்தி முட்டாளாக்கப் பார்க்கிறார் என்பது விஞ்ஞானிகளின் வாதமாகும்.












Click it and Unblock the Notifications