சிரியா எண்ணை கிடங்கு பகுதியில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்- 30 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
பெய்ரூட்: சிரியாவில் எண்ணை கிடங்கு பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவின் சயீர் பகுதியிலுள்ள எண்ணை மற்றும் எரிவாயு கிடங்கு பகுதியில் இன்று திடீரென தாக்குதல் நடத்தினர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். இத்தாக்குதலில் சிரியா பாதுகாப்பு வீரர்கள் 30 பேர் கொல்லப்பட்டதாகவும், தீவிரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் முன்பு ஒருமுறை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 270பேர் கொல்லப்பட்டிருந்த நிலையில் மீண்டும் ஒரு தாக்குதல் அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. அதி நவீன ஆயுதங்களை கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications