ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 3 ஆண்களின் தலையை துண்டித்த ஐஎஸ்ஐஎஸ்

Subscribe to Oneindia Tamil

பாக்தாத்: வடக்கு ஈராக்கில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இருவர் உள்பட 3 ஆண்களின் தலையை துண்டித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

வடக்கு ஈராக்கில் உள்ள நினேவா மாகாணத்தில் பொதுமக்கள் மத்தியில் 3 பேரை மண்டியிட வைத்து அவர்களின் கண்களை கட்டி தலையை துண்டித்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். தலை துண்டிக்கப்பட்ட 3 பேரில் இருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதற்காக கொல்லப்பட்டார்கள். ஷரியா சட்டத்தின்படி ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை மரணம் ஆகும்.

ISIS beheads alleged homosexuals in northern Iraq

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஷரியா சட்டத்தை பின்பற்றுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த 3 பேரின் தலை துண்டிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததில் இருந்து ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்தும், உயரமான கட்டிங்களில் இருந்து தள்ளிவிட்டும் கொலை செய்து வருகிறார்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். ஓரினச்சேர்க்கையாளர்கள் மோசமானவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குர்து பெஷ்மெர்கா படை அமெரிக்காவின் உதவியுடன் தீவிரவாதிகளுக்கு எதிராக கிர்குக் நகரில் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+