பாகிஸ்தானிடமிருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்குவோம்: சொல்வது ஐ.எஸ். தீவிரவாதிகள்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணு ஆயுதத்தை வாங்குவோம் என்று ஐ.எஸ். தீவிரவாதிகள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டாபிக் இதழில் ஐ.எஸ். இயக்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஐ.எஸ். தீவிரவாதிகள் அமைப்பு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து வருகிறது. இந்த நவீன யுகத்தில் மிகத்தீவிரமான குழுவாக தொடங்கப்பட்ட ஐ.எஸ். அமைப்பு இன்று மாபெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது.
நைஜீரியாவில் செயல்பட்டு வரும் போகோஹரம் தீவிரவாதிகள் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து செயல்படப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளின் அமைப்புகளை உள்ளடக்கிய பேரியக்கமாக ஐ.எஸ். உருவாகியுள்ளது.
தற்போது மில்லியன் டாலர்கள் அளவுக்கு நிதி கையிருப்பு உள்ளதால் விரைவில் லஞ்சம் லாவண்யத்தில் திளைக்கும் பாகிஸ்தான் அதிகாரிகள் மற்றும் ஆயுத தரகர்கள் உதவியுடன் அந்நாட்டிடம் இருந்து அணு ஆயுதங்களை வாங்க உள்ளது. இதனை அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு டாபிக் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications