சிரியாவில் பயங்கரம்: ஒரே நாளில் 280 பேரை கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
டமாஸ்கஸ்: சிரியாவில் உள்ள அல் புகாலியா நகருக்குள் புகுந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் 280 பேரை ஈவு இரக்கமின்றி கொலை செய்துள்ளனர்.
சிரியாவின் கிழக்கு மாகாணமான தேர் அல் ஜூர் அருகே உள்ள அல் புகைலியா நகருக்குள் கடந்த சனிக்கிழமை காலை ஏராளமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் புகுந்தனர். அவர்கள் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டனர் மற்றும் பல்வேறு அரசு கட்டிடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல்களில் பொது மக்களில் 280 பேர் பலியாகினர். அதில் பெரும்பாலானவர்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரவாதிகள் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 75 பேரையும் கொலை செய்துள்ளனர்.
தேர் அல் ஜூர் பகுதியின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகளுக்கும், சிரியா ராணுவத்திற்கும் இடையே மீண்டும் சண்டை துவங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈராக் எல்லையோரம் உள்ள விமானப்படைதளம் அருகிலும் தீவிரவாதிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
தீவிரவாதிகள் ஒரே நாளில் 280 பேரை கொலை செய்துள்ளது உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications