சிரியா: ராணுவ விமானத் தளத்தை கைப்பற்றியது ஐ.எஸ்.ஐ.எஸ்!
டமாஸ்கஸ்: சிரியாவில் டப்கா ராணுவ விமான தளத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் கைப்பற்றியுள்ளாது.
சிரியா மற்றும் ஈராக்கில் பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம், அவற்றை ஒருங்கிணைத்து இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். வசம் இருக்கும் ரக்கா நகரை ஒட்டிய டப்கா ராணுவ விமான தளத்தை கைப்பற்ற கடந்த ஒருவார காலமாக போர் நடைபெற்றது.

கடந்த செவ்வாய்க்கிழமையில் இருந்து அரசுப்படைகளுக்கும், ஐ.எஸ். ஐ.எஸ். இயக்கத்தினக்கும் இடையே நடந்த மோதலில் அரசுப்படையை சேர்ந்த 346 பேரும், ஐ.எஸ்.ஐ,எஸ். இயக்கத்தினர் 170 பேரும் பலியாகின.
தற்போது டப்கா ரானுவ விமான தளம் ஐ.எஸ்.ஐ.எஸ். வசமாகி உள்ளது. மேலும் இந்த விமான தளம் அருகே அந்நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 150 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் சிறைபிடித்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications