தற்கொலை தாக்குதல் பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி குண்டு வெடித்து பலி!
பாக்தாத்: ஈராக்கில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சி அளித்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதி எதிர்பாரமல் குண்டு வெடித்ததில் பலியானார்.
ஈராக்கில் "ஐ.எஸ்.ஐ.எஸ்" தீவிரவாதிகளின் அட்டூழியம் உக்கிரமடைந்து வருகிறது. இரக்கமே இல்லாமல், அங்கு தினசரி தற்கொலை தாக்குதல்கள் நடைபெறுவதும் கொத்து கொத்தாக மக்கள் செத்து மடிவதும் அன்றாட நிகழ்ச்சியாக உள்ளது.
அவ்வாறு, ஈராக்கில் வடமேற்கில் உள்ள சலாஹுதீன் மாகாணத்தில் தற்கொலை தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியை "ஐ.எஸ்.ஐ.எஸ்" தீவிரவாத கமாண்டர் ஒருவர் அளித்து கொண்டிருந்தார்.

குண்டை வெடிக்க செய்வது எப்படி என செய்முறை விளக்கம் அளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது இடுப்பில் கட்டியிருந்த குண்டின் மீது அவரது கைபட்டு வெடித்தது.
இதில் அந்த தீவிரவாதி அதே இடத்தில் உடல் சிதறி பலியானார். மேலும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 15 தீவிரவாதிகள் காயம் அடைந்தனர். தகவலறிந்ததும் போலீசாரும், ராணுவமும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஆனால் பயிற்சி அளித்து பலியான தீவிரவாதியின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications