செக்ஸ் அடிமை பெண்களை ஃபேஸ்புக்கில் ரூ.5 லட்சத்திற்கு விற்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள்
பாக்தாத்: பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு பெயர் போன ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் செக்ஸ் அடிமைகளை ஃபேஸ்புக்கில் விற்பனை செய்யும் அளவுக்கு வந்துவிட்டனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் யசிதி இன பெண்கள், சிறுமிகள், கர்ப்பிணிகளை கூட கடத்தி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் கடத்தப்பட்ட பெண்கள், சிறுமிகளில் பலரை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் இடங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் அவர்களுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவர்களின் கருவூலக் கட்டிடம் குண்டு வீசித் தாக்கப்பட்டதில் அங்கு வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கான பணம் எரிந்து சாம்பலாகியது.
இந்த சூழலில் நிதி திரட்ட தீவிரவாதிகள் தங்களிடம் உள்ள செக்ஸ் அடிமைகளை ஃபேஸ்புக்கில் விற்பனை செய்கிறார்கள். அவர்கள் செக்ஸ் அடிமை பெண்களை ரூ.5 லட்சத்து 38 ஆயிரத்திற்கு விற்பனை செய்கிறார்கள்.
ஃபேஸ்புக்கில் செக்ஸ் அடிமை பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு விரும்புவோர் அவரை வாங்கிக் கொள்ளலாம் என விளம்பரம் செய்கிறார்கள். தீவிரவாதிகளின் வசம் ஏராளமான பெண்கள் செக்ஸ் அடிமைகளாக உள்ளனர் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications