அதிபர் இஸ்லாம் கரிமொவ் மரணம்… உஸ்பெஸ்கிஸ்தான் அரசு மவுனம்- துருக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
தாஷ்கண்ட்: உஸ்பெகிஸ்தான் அதிபர் இஸ்லாம் கரிமொவ் மறைந்து விட்டதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது. ஆனால், அந்நாட்டு அரசு இதுகுறித்து மவுனமாகவே உள்ளது.
உஸ்பெகிஸ்தானின் அதிபர் இஸ்லாம் கரிமொவ்வின், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனை அவரது மகளான லோலாவும் உறுதிபடுத்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அரசு "அன்புள்ள குடிமக்களுக்கு பிரதமரின் உடல் நிலை 24 மணி நேரமாக ஆபத்தான கட்டத்தில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம்" என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், வெள்ளியன்று துருக்கியின் பிரதமர் பினாலி இல்டிரிம் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், உஸ்பெகிஸ்தான் அதிபர் இறந்து விட்டதாகவும், உஸ்பெகிஸ்தான் மக்களுடன் தனது கவலையை பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவார காலமாகவே அதிபர் கரிமொவ் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியிருந்த நிலையில், துருக்கி பிரதமர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அந்நாட்டு அரசு இன்னும் இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவில்லை.
ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் கரிமொவ்வின் மரணத்தை உறுதி செய்துள்ளது. மேலும், ஆளும் கரிமொவ் ஆட்சிக்கு எதிரான இணைய தளங்கள் கரிமொவ் இறந்துவிட்டதாகவும் இறுதி சடங்குகள் ரகசியமாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளன.
ஊடகங்கள் தெரிவித்ததற்கு ஏற்ப சமர்காண்ட் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
சோவியத் யூனியனில் உஸ்பெகிஸ்தான் இருந்த போது அதிபராக பதவி ஏற்ற இஸ்லாம் கரிமொவ் 27 ஆண்டுகளாக அந்நாட்டை ஆண்டு வருகிறார். அவருக்கு அடுத்து யார் பொறுப்பேற்பார்கள் என்பது இன்னும் கேள்விக் குறியாகவே உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications