இஸ்ரேலுக்கு பேராபத்து? ஈரானின் உதவிக்கு களமிறங்கும் துருக்கி + பாகிஸ்தான் + சவுதி ராணுவம்? பின்னணி
டெஹ்ரான்: இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் முடிவுக்கு வராமல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இருநாடுகள் இடையே போர் உருவாகிவிட்டதா? என்ற அளவுக்கு தாக்குதல் நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இஸ்ரேலை சமாளிக்க துருக்கி, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்பட பிற இஸ்லாமிய நாடுகளின் ராணுவம் ஒன்றாக இணைய வேண்டும் என்று ஈரான் கூறியுள்ளது. ஏற்கனவே இந்த நாடுகள் இஸ்ரேல் தாக்குதலை கண்டித்த நிலையில் ஈரானுக்கு ஆதரவாக ராணுவத்தை களமிறக்குகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையே உள்ள நீண்டகால பகை தற்போது போராக மாறும் அபாயத்தை எட்டி உள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்க முடிவு செய்துள்ளது.

இதனை தடுக்க இஸ்ரேலும், அமெரிக்காவும் முடிவு செய்தது. அணுஆயுதம் தயாரிக்க மாட்டோம் என உறுதியளிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
இதுதொடர்பாக இருதரப்புக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதற்கிடையே தான் 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் திடீரென்று ஈரான் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் ராணுவ தளம், அணுகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் யுரேனியத்தை செறிவூட்டும் மையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்கியது.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் ஜெருசலேம் மீது ஈரான் ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதையடுத்து இஸ்ரேலும் தொடர்ந்து ஈரானை தாக்கி வருகிறது. ஈரான் தலைநகர் டெல்அவிவ்வில் ஏவுகணைகளை மூலம் இஸ்ரேல் தாக்கி வருகிறது. இருநாடுகளும் மாறி மாறி தாக்கி வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஈரானின் புரட்சிகர காவல் படையின் ஜெனரலும், ஈரான் நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினருமான மொஹ்ஷின் ரெசாயி ஈரான் நாட்டின் ஊடகத்தில் கூறியதாவது: நாங்கள் இஸ்லாமிய ராணுவத்தை ஒன்றிணைத்து செயல்பட விரும்புகிறோம். துருக்கி, சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் பிற நாடுகளை ஒன்றிணைக்க விரும்புகிறோம்.
இஸ்ரேல் இப்போது ஈரான், ஏமன், பாலஸ்தீன் உள்ளிட்ட நாடுகளை குறிவைத்துள்ளது. இஸ்லாமிய நாடுகள் இப்போது ஒன்று சேராவிட்டால் அவர்கள் அனைவரும் இதேபோன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் வரலாம். ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு போட்டால் பதிலுக்கு இஸ்ரேல் மீது அணுகுண்டு போட தயார் என்று பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
இதனால் ஈரானுக்கு ஆதரவாக பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா ராணுவ வீரர்களை களமிறக்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பாக அந்த நாடுகள் சார்பில் இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இருப்பினும் இஸ்ரேல் - ஈரான் மோதலில் ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியா உள்ளிட்டவை கண்டித்துள்ளதோடு, ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
-
தலைக்கு மேல் பறக்கும் ஏவுகணைகள்.. வளைகுடா நாடுகளை விட்டு வர மறுக்கும் இந்தியர்கள்! உருக்கமான பின்னணி -
"விட்டால் போதும்.." கையை பிசையும் டிரம்ப்.. ஈரான் போரை முடிக்க முடியாமல் திணறும் அமெரிக்கா! -
"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்! -
அமெரிக்கா வான் தாக்குதலில் இந்தியா வர இருந்த ஈரான் விமானம் சேதம்! என்ன நடந்தது? -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
இஸ்ரேல் முழுதும் வெடித்த போராட்டம்.. ஈரான் போரை கைவிட மக்கள் கொந்தளிப்பு! நெதன்யாகுவிற்கு சிக்கல் -
இஸ்ரேலுக்கு நாலா பக்கமும் விழும் அடி.. ஹைபா கடற்படை தளம் மீது ஏவுகணை வீசி ஹிஸ்புல்லா தாக்குதல் -
பாகிஸ்தான் இருக்க வேண்டிய இடம் இதுதான்.. முகத்தில் அறைந்த அமெரிக்க நாடாளுமன்ற அறிக்கை -
ஈரான் போர் காரணமாக எந்தெந்த நாட்டில் என்ன இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தெரியுமா? லிஸ்ட் இதோ -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
இனி ரேஷன் கடை மட்டுமில்லை! பெட்ரோல் பங்க்குகளிலும் மண்ணெண்ணெய் விற்பனை! மத்திய அரசு அனுமதி -
ஒரு மாதமாக இழுக்கும் ஈரான் போர்.. டிரம்ப் சொன்ன பாசிட்டிவ் மேட்டர்! இந்தியாவுக்கு பெரிய நிம்மதி!












Click it and Unblock the Notifications