லெபனான் வீரர் தலையைத் துண்டித்து ஐ.எஸ்.ஐ.எஸ். மீண்டும் வெறிச்செயல்

Subscribe to Oneindia Tamil

பெய்ரூட்: அமெரிக்க பத்திரிகையாளர்களின் தலையை துண்டித்த ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தற்போது லெபனான் வீரர் ஒருவரின் தலையைத் துண்டித்து வெறியாட்டம் போட்டுள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை இணைத்து இஸ்லாமிய நாடு அமைத்துள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. சிரியாவில் உள்நாட்டு போர் செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர்கள் ஜேம்ஸ் போலி, ஸ்டீவன் சாட்லாப் ஆகியோரை அந்த இயக்கம் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றது.

Expiry passport: Man arrested at Chennai airport

பின்னர் இருவரையும் தலையை துண்டித்து கொலை செய்து விட்டனர். இந்த நிலையில் தற்போது அந்த இயக்கத்தினர் லெபனான் நாட்டைச் சேர்ந்த போர் வீரர் ஒருவரை தலையை துண்டித்து தங்கள் வெறிச்செயலை நிறைவேற்றியுள்ளனர்.

கடந்த மாதம் லெபனான் எல்லைப்பகுதியான ஆர்சால் நகரில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கும் லெபனான் படை வீரர்களுக்கும் இடையே கடும்சண்டை ஏற்பட்டது. அப்போது லெபனான் படை வீரர்கள் 19 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து வந்தனர்.

அவர்களில் அலி அல்-செய்யது என்பவரை கடந்த வாரம் தலையை துண்டித்து கொலை செய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மற்றொரு வீரர் அப்பாஸ் மெட்லிஜ் என்பவர் தப்பி செல்ல முயற்சித்தபோது தீவிரவாதிகளால் தலையை துண்டித்து கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+