மத நிந்தனை செய்ததாக கூறி 4 பேரை தலையைத் துண்டித்துக் கொன்ற ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்!
பெய்ரூட்: சிரியாவில், மத நிந்தனை செய்ததாக கூறி 4 பேரை தலையைத் துண்டித்துக் கொன்றுள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.
மேற்கு சிரியாவில் இந்த கொடும் செயல் நடந்துள்ளது. இதை சிரியாவில் மனித உரிமைகளைக் கண்காணித்து வரும் அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட நால்வருமே ஆண்கள் ஆவர்.
ஹாம்ஸ் என்ற நகருக்கே அருகே இந்த தண்டனையை பொதுமக்கள் மத்தியில் நிறைவேற்றியுள்ளனராம் தீவிரவாதிகள்.

சிரியா மற்றும் ஈராக்கில் தங்களது பிடியில் உள்ள பகுதிகளில் இதுவரை நூற்றுக்கணக்கானோரை இதுபோல மத நிந்தனை செய்தது, மதக் கட்டுப்பாட்டை மீறியது, கள்ளக்காதல், ஓரினச் சேர்க்கை என்று பல்வேறு புகார்களின் பேரில் தலை துண்டித்தும், கற்களை வீசியும் கொன்றுள்ளனர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போரின்போது சிக்கும் வெளிநாட்டவர், ராணுவத்தினர் உள்ளிட்டோரையும் கூட இதேபோல அவர்கள் கொன்று குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் சிரியாவின் மன்பிஜ் நகரில், முறை தவறி உறவில் ஈடுபட்டதாக கூறி ஒரு ஆணையும், பெண்ணையும் கல்லால் அடித்துக் கொன்றனர் தீவிரவாதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications