2 சீன, நார்வே பிணைக் கைதிகளை படுகொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
பெய்ரூட்: சீனா மற்றும் நார்வே நாடுகளைச் சேர்ந்த இரண்டு பிணைக் கைதிகளை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். பிரான்ஸ் மற்றும் ரஷ்ய விமானத் தாக்குதல் சிரியாவில் உக்கிரமடைந்து வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய, பிரான்ஸ் நாடுகளின் லேட்டஸ்ட் தாக்குதலில் 33 தீவிரவாதிகள் கொல்லப்பட்ட செய்தி வெளியானதும், இரண்டு பிணைக் கைதிகள் கொல்லப்பட்ட தகவலை ஐஎஸ் வெளியிட்டது.

ஐஎஸ் அமைப்பின் டபிக் என்ற ஆங்கில பத்திரிகையில் அந்த இரு பிணையாளிகளின் உடல்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கிராபிக்ஸ் முறையில் இதை வெளியிட்டுள்ளனர். அவர்கள் சீனாவைச் சேர்ந்த பான் ஜிங்குயி மற்றும் நார்வேயின் ஓலே ஜோஹன் கிரிம்ஸ்கார்ட் ஆப்ஸ்டாட் என்று தெரிய வருகிறது.
இருப்பினும் இவர்கள் எப்போது, எங்கு வைத்து யாரால் கொல்லப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. இருப்பினும் அவர்களது தலையை துப்பாக்கிக் குணடுகளால் துளைத்தெடுத்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரில் 129 பேரை ஐஎஸ் தீவிரவாதிகள் வெறித்தனமாக கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து இந்த பிணையாளிகள் படுகொலைச் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த படுகொலை செய்தியின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதித்து வருவதாக நார்வே பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேசமயம், சீன அரசு இந்த செய்தி உண்மைதான் என்று கூறியுள்ளது.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications