முடிவுக்கு வரும் மோதல்.. இறங்கி வரும் இஸ்ரேல்? ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வாஷிங்டன்: காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்றும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேலில் நுழைந்து அதிரடி தாக்குதலை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே இஸ்ரேல் இந்த போரை தொடங்கியிருக்கிறது. பல மாதங்களாக இந்த போர் நீடித்து வருகிறது.

இஸ்ரேல் ஹமாஸ் போர்: இந்த போரின் காரணமாக எண்ணற்ற மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர சர்வேத அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் காசா மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இருந்த போதிலும் தெற்கு காசாவின் ர்ஃபா மீது தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஆக்கிரமிப்பை நிறுத்தினால்: இந்த நிலையில், காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான உடன்படிக்கைக்கு தயாராக இருப்பதாக ஹமாஸ் தெரிவித்தது. இது தொடர்பாக ஹமாஸ் கூறுகையில், "ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சுவார்த்தையை நடத்தியபடியே, மற்றொரு பக்கம் எங்கள் மக்கள் மீது இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலின் இந்த பாலிசியை ஹமாஸ், பாலஸ்தீனிய அமைப்புகள் ஏற்காது.
காசாவில் அமைதியை ஏற்படுத்த: காசாவில் உள்ள மக்களுக்கு எதிரான போர் மற்றும் ஆக்கிரமிப்பை நிறுத்தினால் முழுமையான போர் நிறுத்தத்திற்கான உடன்பாட்டை பின்பற்ற நாங்கள் தயாராக உள்ளோம். பணய கைதிகளை விடுவிப்பது முதல் விரிவான ஒப்பந்தத்திற்கு தயாராக இருக்கிறோம் என்று கூறியது. இந்த நிலையில் தான் காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் பேச்சு: மேலும், இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்றும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், இஸ்ரேல் முன்மொழிந்துள்ள திட்டத்தின் படி ,ஆறு வார காலத்திற்குள் படிப்படியாக மக்கள் மிகுந்த இடத்தில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும் என கூறினார்.
போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது. இஸ்ரேல் விரிவான சண்டை நிறுத்தம் கொண்டு வருவதற்கும் பினையக்கைதிகளை விடுவிப்பதற்கான விரிவான திட்டம் இதுவாகும்.
பேச்சுவார்த்தை நடந்தால்: காசாவில் முழுமையான சண்டை நிறுத்தம், காசாவில் மக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுதல், பினைக்கைதிகளை விடுவிப்பது என இதற்கு ஈடாக பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும் ஆகியவை இந்த 6 வார காலக்கட்டத்தில் நடக்கும் என்று ஜோ பைடன் கூறினார்.
இந்த ஆறு வார காலக்கட்டத்தில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தால், சண்டை நிறுத்தம் தொடரும். போர் நடக்காது. ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
-
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
அமெரிக்காவை அதிரவைக்கும் 'மர்ம ஹம்' சத்தம்.. வானில் தோன்றிய பச்சை நிற ஒளி! என்னங்க நடக்குது? -
கச்சா எண்ணெய் யுத்தம்.. கத்தாரும் சவுதியும் காலி? குட்டி ஆப்ரிக்க நாட்டிற்கு அடித்த மெகா ஜாக்பாட்! -
ஈரான் போரில் தலையைவிட்ட புடின்.. ரஷ்யாவின் 'நிழல்' ஆட்டம்! பறந்து போன பார்சல்.. ஆபரேஷன் ஹிடன் ஹேண்ட் -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
ட்ரம்ப் மூக்கை உடைத்த ஈரான்.. 15 கண்டிஷன்களை தூக்கி எரிந்த அலியாபாடி! வெறி கொண்டு அடிக்கும் இஸ்ரேல்! -
அடித்து ஆடும் பாகிஸ்தான்.. ஈரான் - அமெரிக்கா போரில் சத்தமின்றி லாபம் பார்க்கும்.. இஸ்லாமாபாத்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications