2-வது நாள் யுத்தம்: இஸ்ரேல், பாலஸ்தீனத்தில் மனிதப் பேரவலம்- 1,000-க்கும் அதிகமானோர் பலி!
டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கம் கடல், தரை, வான்வழி என மும்முனைத் தாக்குதலை நடத்தினர். இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. 2-வது நாளாக நீடிக்கும் இந்த தாக்குதல்களில் இருதரப்பிலும் இதுவரை சுமார்1000-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்; 3000 பேர் படுகாயமடைந்துள்ளனர்; உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
பாலஸ்தீனத்தின் ஆயுதம் தாங்கிய ஹமாஸ் இஸ்லாமிய ஜிஹாதி அமைப்பு நேற்று காலை 6.30 மணி முதல் இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தி ஊடுருவியது. ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனியர் படை இஸ்ரேலுக்குள் ஊடுருவி ஏராளமானோரை பிணைக் கைதிகளாக கடத்திச் சென்றது.

ஹமாஸ் தாக்குதல்: Operation Al-Aqsa Flood என்ற பெயரில் ஹமாஸ் இயக்கம் இத்தாக்குதலை தொடங்கியது. சுமார் 7,000 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலுக்குள் ஊடுவினர். கடல், தரை மற்றும் வான்வழியில் ஹமாஸ் இயக்கம் இத்தாக்குதல்களை நடத்தியது.
இஸ்ரேல் பதிலடி: Operation Iron Swords என்ற பெயரில் காஸா முனை, மேற்கு கரை பகுதியில் நிலை கொண்டுள்ள ஹமாஸ் ஜிஹாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. இஸ்ரேலின் டெல் அவிவ் வடக்கு பகுதியில் ஏவுகணை தாக்குதல்களையும் தெற்கு இஸ்ரேலுக்குள் ஆயுதம் தாங்கிய பாலஸ்தீனர்கள் ஊடுருவலையும் ஹமாஸ் மேற்கொண்டது. இதனையடுத்தே ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா முனை பகுதியில் அதிரடி தாக்குதல்களை இஸ்ரேல் மேற்கொண்டு வருகிறது. இன்று 2-வது நாளாகவும் இந்த யுத்தம் நீடிக்கிறது.
1000 பேர் பலி, 3000 பேர் படுகாயம்: இதுவரையிலான தாக்குதல்களில் இஸ்ரேல் தப்பில் 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பாலஸ்தீனர்கள் 500 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 500-க்கும் அதிகமானோர் பலியாகி இருக்கக் கூடும் என மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டுகின்றன சர்வதேச ஊடகங்கள். இருதரப்பிலும் தற்போது வரை 3,000 பேர் வரை படுகாயமடைந்து சிகிச்சை பெறுவதாகவும் இதனால் உயிரிழப்பு மேலும் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இறுதி யுத்தம்- ஹமாஸ்: இத்தாக்குதல் தொடரபாக அல் ஜசீரா டிவி சேனலிடம் பேசிய ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் கலீத் குடோமி, பல பத்தாண்டுகளாக பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் அடக்குமுறைக்கு பதிலடிதான் இந்த தாக்குதல். காஸா முனையில் பாலஸ்தீனர்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிறுத்த சர்வதேசம் முன்வர வேண்டும் என்பதற்காகவே இத்தாக்குதல் என்கிறார். ஹமாஸ் ராணுவ தளபதி முகமது தெய்ப், இந்த பூமிப்பந்தில் இனி ஆக்கிரமிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில் இத்தாக்குதல் நடத்தப்படுகிறது என்றார்.
போரில் வெல்வோம்- இஸ்ரேல்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், இந்த யுத்தத்தில் நாங்களே வெல்வோம் என்கிறார். இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கால்லன்ட், இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதல் மூலம் ஹமாஸ் மிகப் பெரிய தவறை செய்துவிட்டது; நிச்சயம் பாடம் கிடைக்கும் என்கிறார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications