எல்லையில் இந்தியாதான் படைகளை குவித்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது: சீனா பகீர் குற்றச்சாட்டு!
எல்லையில் இந்தியா தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பெய்ஜிங்: எல்லையில் இந்தியா தான் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருவதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்தியா சீனா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டு வரும் சீனா அந்நாட்டு ராணுவ வீரர்களையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்தது. இதனால் எல்லையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

படைகளை திரும்ப பெற வலியுறுத்தல்
சீனப் படைகளைத் திரும்ப பெற அந்நாட்டு அரசு மறுத்துள்ளது. ஆனால் இந்தியா தனது படைகளைத் திரும்ப பெற வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவால் தான் பதற்றம்
இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது எல்லையில் இந்தியா தான் பதற்றத்தைத் தூண்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியா ஆக்கிரமிப்பு
இந்தியா எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற்றாலே பிரச்சனை தீர்ந்துவிடும் என்றும் அவர் கூறினார். மேலும் சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை என இந்தியாவே ஒப்புக்கொண்டுள்ளது என்று கூறிய அவர், இந்தியாதான் சீனாவுக்குள் ஊடுருவியிருப்பதாகவும் தெரிவித்தார்.

இதுவே முதல்முறை
டோக்லாம் பிரச்சனை குறித்து சீன அமைச்சர் ஒருவர் இதுபோன்று கூறுவது இதுவே முதல்முறை ஆகும். இந்நிலையில் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நிச்சயம் டோக்லாம் பிரச்சனை குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications