இது முடியவில்லை டிரம்ப்.. அப்பாவின் இறுதி ஊர்வலத்தில் சபதம் எடுத்த சுலைமானி மகள்.. கடும் எச்சரிக்கை!
என் அப்பாவை கொன்றுவிட்டதால் எல்லாம் முடியவில்லை, அமெரிக்காவை ஈரான் மோசமாக தாக்கும் என்று சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்
Recommended Video
டெஹ்ரான்: என் அப்பாவை கொன்றுவிட்டதால் எல்லாம் முடியவில்லை, அமெரிக்காவை ஈரான் மோசமாக தாக்கும் என்று சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க படைகள் கடந்த வாரம் டிரோன் விமானம் மூலம் நடத்தியது. ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்.
ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி அந்நாட்டை மொத்தமாக கட்டுப்படுத்தி வந்தவர். அந்நாட்டிலேயே அதிக சக்தி வாய்ந்த நபர் இவர்தான். ஈரானில் முக்கிய முடிவுகளை எடுக்க கூடிய ராணுவ தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று முதல் நாள் இவரின் இறுதி ஊர்வலம் நடந்தது.

என்ன பேட்டி
இந்த நிலையில் சுலைமானி மகள் செய்னப் சுலைமானி தனது அப்பாவின் மரணம் குறித்து பேட்டி அளித்துள்ளார். அப்பாவின் இறுதி ஊர்வலம் முடிந்த பின் பேசிய செய்னப் சுலைமானி, என் அப்பாவை கொன்றுவிட்டார்கள். அவருக்கு எவ்வளவு மக்கள் ஆதரவு இருந்தது என்று இந்த கூட்டத்தை பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

சுலைமானி மகள் செய்னப்
வெறிபிடித்த டிரம்ப்தான் இப்படி செய்தது. எல்லாம் முடிந்துவிட்டது. என் அப்பாவை கொன்றால் கதை முடிந்தது என்று அவர் நினைக்கிறார். ஆனால் டிரம்ப் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். எதுவும் முடியவில்லை.

பதிலடி
இதுதான் தொடக்கம். அமெரிக்கா மீது ஈரான் மிக கடுமையான தாக்குதல் நடத்தும். டிரம்பை இதற்காக பழி வாங்காமல் ஈரான் விடாது. ஈரானின் முழு பலத்தை அமெரிக்கா தெரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை.

வெறும் தொடக்கம்
அமெரிக்க குடும்பங்கள் வருத்தப்படும். ஈராக்கில் இருக்கும் தங்கள் குடும்பத்தை சேர்ந்த அமெரிக்க ராணுவ வீரர்களை அவர்கள் இனி பார்க்க முடியாது. அவர்களின் குடும்பம், ராணுவ வீரர்களின் மரணத்தை மட்டும்தான் பார்க்க போகிறது என்று செய்னப் சுலைமானி குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications