நெஞ்சை உறைய வைக்கும் இத்தாலி நிலநடுக்கம்...தோண்ட தோண்ட சடலங்கள்.. எமர்ஜென்சி பிரகடனம்!!
ரோம்: இத்தாலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் எமர்ஜென்சியை அறிவித்துள்ளது இத்தாலி அரசு.
இத்தாலி நாட்டில் நோர்சியா என்ற நகரை மையமாக கொண்டு புதன்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என பதிவாகி இருந்தது. பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுமார் 80 முறை லேசான அதிர்வுகளும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன. சின்னாபின்னாகி போயுள்ள இந்த இடங்களில் இருந்து தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் என 250க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சடலங்கள் கிடைத்துக் கொண்டே இருப்பதால் இறப்பின் எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இத்தாலி நாட்டு பிரதமர் மேட்டியோ ரென்சி எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தியுள்ளார். மேலும் நிலநடுக்கம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய வீடுகள் கட்ட 4,200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் வீட்டை இழந்தவர்கள் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவார்கள் என்றும் இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார். நில நடுக்கத்தால் பாதிக்காத வகையிலான தொழில் நுட்பத்தில் வீடுகள் கட்டவும் உத்தரவிட்டுள்ளார்.
அமட்ரைஸ், அர்குவேட்டா, அக்குமோலி, பெஸ்கரா டெல் டிரோடோ ஆகிய நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் அமட்ரைஸ் நகரித்தில் மட்டும் 200 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications